Monday, January 6, 2020

கம்பராமாயணம் 2


பால காண்டம்

ஆற்றுப் படலம்


18.
     மணியும், பொன்னும், மயில் தழைப் பீலியும்,
     அணியும் ஆனை வெண்கோடும், அகிலும், தன்
     இணை இல் ஆரமும், இன்ன கொண்டு ஏகலான்,
     வணிக மாக்களை ஒத்தது - அவ் வாரியே.

முத்து, மணி, மயிலிறகு, யானைத் தந்தங்கள்,
தனக்கு நிகரில்லா சந்தன மரம்
இவையனைத்தையும் வாரிக்கொண்டு வருது சரயு நதியின் வெள்ளம் ஆகவே இது வணிகர்க்கு ஒப்பாகும்.

20.
     மலை எடுத்து, மரங்கள் பறித்து, மாடு
     இலை முதல் பொருள் யாவையும் ஏந்தலான்,
     அலை கடல்-தலை அன்று அணை வேண்டிய
     நிலையுடைக் கவி நீத்தம் - அந் நீத்தமே.

மலைகளைப் பெயர்த்துக்கொண்டும்,
மரம் செடி கொடி களை இழுத்துக்கொண்டும்
வரும் சரயு நதியின் வெள்ளம்
அலை நிறைந்த கடலிடையே
அணை கட்டத் துணிந்த
வானரக் கூட்டத்திற்கு ஒப்பும்.

நாட்டுப் படலம்

33.
     வரம்பு எலாம் முத்தம்; தத்தும்
        மடை எலாம் பணிலம்; மா  நீர்க்
     குரம்பு எலாம் செம் பொன்; மேதிக்
        குழி எலாம் கழுநீர்க் கொள்ளை;
     பரம்பு எலாம் பவளம்; சாலிப்
        பரப்பு எலாம் அன்னம்; பாங்கர்க்
     கரம்பு எலாம் செந் தேன்; சந்தக்
        கா எலாம் களி வந்து வண்டு ஈட்டம்.

வயல் வரப்புகளில் முத்துக்கள்
தண்ணீர் பாயும் மடைகளில் மிதக்கும் சங்குகள்;
நீர்ப்பெருக்கின் இடையில் கிடக்கும் செம்பொன்;
மலர்கள், பவளங்கள் நிறைந்து கிடைக்கும் இடங்கள்
நெற்பயிர்ப் பரப்புகளில் அன்னங்கள்;
அருகில் பயிர் செய்யப்படாத பரப்புகளில் செந்தேன்;
சோலைகளில் மது உண்டு மயக்கத்தில் திரியும் வண்டினங்கள்;
(இத்தகையது கோசல நாடு)

(தொடரும்)

No comments:

Post a Comment