Thursday, December 1, 2011

மெய்ப்பொருள் நாயனார் - 2

சிவனடியார் வேடம் பூண்டால்
அவனடி பணிந்து நிற்பான்
அரசன் என்று அறிந்தவன் முத்தநாதன்;
அதனால் அவ்வேடமே அணிந்து,
அரசன் அருகில் சென்று,
கொன்று விட எண்ணினான்
கோழை முத்தநாதன்;


      மெய்யெலாம் நீறு பூசி
        வேணிகள் முடித்துக் கட்டிக்
      கையினிற் படைக ரந்த
        புத்தகக் கவளி யேந்தி
      மைபொதி விளக்கே யென்ன
        மனத்தினுட் கறுப்பு வைத்துப்
      பொய்தவ வேடங் கொண்டு
        புகுந்தனன் முத்த நாதன்.


அந்த நாளும் வந்தது;
தன் உடலெங்கும் சாம்பல்
தடவிக்கொண்டு,
தலை முடியைச் சுருட்டி
சடாமுடி அணிந்துக் கொண்டு,
திருநீறு பூசிக் கொண்டு,
தன் ஆடையில் ஒரு ஆயுதத்தை
மறைத்துக் கொண்டு,
மெய்ப்பொருளார் அரண்மனை நோக்கி
பொழுது சாய்ந்த பிறகு
புறப்பட்டான்;

வாயில் ஓம் நமசிவாய மந்திரம்
உரைத்துக்கொண்டு
வந்தவனை எந்த
வாயிற்காப்பாளனும்
வழிமறிக்கவில்லை, அவனை
வணங்கி
வரவேற்றனர்;
தடையின்றி உள்ளே செல்ல
தயக்கமின்றி அனுமதித்தனர்;

மெய்ப்பொருளாரின்
மெய்க்காப்பாளன் தத்தன்;
அரசனைக் காப்பதே
அவன் தன் கடமை என்று
அனுதினமும் எண்ணிச் செயலாற்றினான்;

அரசன் உறங்கச் சென்றபின்,
அரண்மனைக்குள் புகுந்தவனை
அந்தப்புரத்தில் நுழையமுடியாது
தடுத்தான் தத்தன்;
காவலன்
கண்ணுறங்கச் சென்ற வேளையில்
காண வந்தக் காலனைக் கொஞ்ச நேரம்
காத்திருக்கச் சொன்னான்;

                                                                        ( தொடரும் )

4 comments:

  1. தொடருங்கள் நாங்களும் காத்திருக்கோம்....

    ReplyDelete
  2. where do you get this much time to do .... these....

    Gopi

    ReplyDelete
  3. நன்றி தினேஷ்
    வருகை புரிந்தமைக்கும் கருத்துக்கும்.

    ReplyDelete
  4. Gopi, if you wish to do, you'll find time.

    ReplyDelete