Saturday, December 3, 2011

மெய்ப்பொருள் நாயனார் - 4


      வேதனை யெய்தி வீழ்ந்த
        வேந்தரால் விலக்கப் பட்ட
      தாதனாந் தத்தன் தானும்
        தலையினால் வணங்கித் தாங்கி
      யாதுநான் செய்கே னென்ன
        எம்பிரா னடியார் போக
      மீதிடை விலக்கா வண்ணம்
        கொண்டுபோய் விடுநீ யென்றார்.


'சிவனடியார் வேடத்தில் வந்தவர்க்கு
சிரமம் ஏதும் நேராது,
எல்லை கடக்கும் வரை
எந்தத் தடையும் வராது காத்து,
அழைத்துச் செல்' என்று
ஆணையிட்டார்;

தத்தன் பகைவனை அழைத்துக்கொண்டு
சென்றான்; அவன்
திரும்பி வரும்வரை
மன்னன் காத்திருந்தான்;
எத்தடையும் இல்லாது
எதிரி சென்றுவிட்டான்
என்று சொன்னான் தத்தன்,
மகிழ்ந்தான் மன்னன்;

ஆண்டவனின் அடியவன் என்ற
அவதாரத்தில் வந்த கொடியவனுக்கும்
அன்போடு கருணை காட்டிய மெய்ப்பொருளாரை
அந்தச் சிவன் ஆட்கொண்டு,
என்றும் தன் திருவடியில் இருக்கும்படி
அருள் செய்தார்;


      தொண்டனார்க் கிமையப் பாவை
        துணைவனார் அவர்முன் தம்மைக்
      கண்டவா றெதிரே நின்று
        காட்சிதந் தருளி மிக்க
      அண்டவா னவர்கட் கெட்டா
        அருட்கழல் நீழல் சேரக்
      கொண்டவா றிடைய றாமல்
        கும்பிடுங் கொள்கை ஈந்தார்.


                                                                  ஓம் நமசிவாய

No comments:

Post a Comment