Saturday, December 17, 2011

அமர்நீதி நாயனார் - 3

'அமர்நீதியாரே,
ஏன் இந்த நாடகமாடுகிறீர் ?
என் ஆடையின் சக்தியை
எப்படியோத் தெரிந்து கொண்டு, அதை
எடுத்துக் கொண்டு,
கலங்கியக் கண்ணோடு,
காணாமற் போய் விட்டதெனச் சொன்னால்
யாம் நம்ப வேண்டுமோ ?'

'ஐயனே,
எப்படியோ மறைந்து விட்டது
தங்கள் பொருள், அதற்கு ஈடாக
என்னால் முயன்ற
எதை வேண்டுமானாலும் கேளுங்கள்,
பொன் பொருள் பட்டாடை எல்லாம் தருகிறேன்;
எவ்வளவு வேண்டுமானாலும்
எடுத்துத் தருகிறேன்;
என் பிழை பொறுத்து,
என்னை மன்னித்து அருள வேண்டும்'

     பணியும் அன்பரை நோக்கி அப்பரம்பொருளானார்
     தணியும் உள்ளத்தராயினர் போன்று நீர் தந்த
     மணியும் பொன்னும் நல்லாடையும் மற்று மென்செய்ய
     அணியுங் கோவணம் நேர்தர அமையும் என்றருள

அணிய என் ஆடை வேண்டும் எனக்கு;
தாங்கள் தரும் பொன் பொருள் பட்டாடை எதற்கு ?
என் ஒராடைக்கு இணையாய் ஏதேனும் தர முடியுமா உம்மால் ?
என்று சொல்லி தன் கோவணத்தை தட்டில் வைத்து
'இதற்கு ஈடாய் என்ன இருக்கு உம்மிடம்' என்று கேட்டார் அடியார்;

அமர்நீதியாரும்
அவர் சொல்லுக்கு இணங்கி,
அளக்கும் தராசு ஒன்று கொணர்ந்தார்;
அடியவரின் கோவணத்தை ஒரு தட்டில் வைத்தார்;
அதற்கு அடுத்தத் தட்டில் தான் கொணர்ந்த கோவணத்தையும் வைத்தார்;

ஆண்டவனின் பொருளுக்கு ஈடு
ஆரிடம் இருக்கு ?

ஆடியவர் கோவணமிருந்த தட்டு கீழிறங்க
அமர்நீதியார் கொணர்ந்த கோவணம் மேலேற,
தன் வீட்டில் வைத்திருந்த மேலும் சில /பல
துணிகளை அள்ளி எடுத்து வந்து வைக்க,
அப்பொழுதும் அத்தராசு சமமாகாது மேலேறிக் கிடக்க,

ஆண்டவனின் திருவிளையாடலை
அறிந்து கொள்ள முடியாது
அமர்நீதியார் திகைத்து நின்றார்;
ஒரு கோவணத்திற்கு இணையாய்
இத்தனை ஆடைகள் வைத்தும்
இரண்டும் சமமாகாது
இருப்பதேனோ ? என்று வியந்து நின்றார்;

                                                                        ( தொடரும் )

No comments:

Post a Comment