Sunday, December 4, 2011

வள்ளித் திருமணம் - 1


      பானைவயிரோனுக்கு இளையவனே,
      பார்வதி சங்கரன் புதல்வனே,
      பன்னிரண்டு கையுடையவனே,
      ‘ஓம்’ என்ற சொல்லுக்குப்
      பொருளுரைத்து பெயரெடுத்தவனே,
      முருகா ! பணிகிறேன் உன்னடி,
      காத்திடு இனி நீ;


முன்னுரை – என்னுரை

முருகன் வள்ளித் திருமணத்தை
முத்தமிழில் வசனக் கவிதையில் சொல்லிட
முயல்கிறேன்;
பிழை இருக்கும், பொருத்தருள வேண்டும்;



நம்பிராஜன்

நாடு சித்தூர், இடம் கழுகுமாமலை
நாடாளும் அரசன்
நம்பிராஜன்.
வேல்முருகனைக் குல தெய்வமாய்க்
கொண்டு வாழும் குலம்,
வேடர் குலம்,
அவன் குலம்.

கந்தனை வழிபட்டு,
கடமையாற்றிக்கொண்டிருக்கையில் ஒருநாள்,
வேடவர்கள் வந்தனர்;
வேந்தனிடம் சொன்னனர்
துட்ட மிருகங்கள்
துரத்துது, துன்புருத்துது,
பயிர்களை மெல்லுது, சில
உயிர்களைக் கொல்லுது, துரத்திப்
பிடிக்குமுன் ஓடிச் செல்லுது;

தலைவா நீ
தயவு செய்து, எங்கள்
துன்பம் போக்க
துணை புரியவேண்டும்;

வேடவர்
வேண்டினர்;
வேந்தன் கிளம்பினான்
விலங்குகளை
வேட்டையாட;
வேந்தனுடன்
வந்தனர் அவன்
விழுதுகள்;


      வில்லை எடுத்து வாடா தம்பி,
      வேலையும் எடுத்து வாடா,
      நீ என்னோடு வாடா,
      வாடா தம்பி வாடா நீ
      விரைந்து வாடா;

      வாட்டம் தரும் விலங்கினங்களைக்
      கொல்வோம் வாடா,
      புல்லையும் நெல்லையும் அழிக்குதடா,
      வாடா, அம்மிருகங்களை அழித்திடுவோமடா;
      வாடா தம்பி வாடா நீ
      விரைந்து வாடா;

      பிள்ளைகளுக்குத் தொல்லைகள் தருதுடா,
      அவ் விலங்குகளை இல்லை என்றாக்கிடுவோமடா;
      வாடா தம்பி வாடா நீ
      விரைந்து வாடா;


                                                                        ( இன்னும் வருவாள் )

No comments:

Post a Comment