Tuesday, December 13, 2011

வள்ளித் திருமணம் - 10

'ஆனை என்றால்
அம்மணிக்கு பயமோ'

'ஆம்'

'சரி வா அந்தப் பக்கம் சென்றுவிடுவோம்'

இருவரும் வேறிடம் செல்லத் தொடங்கினர்;

மனதிற்குள்
மகிழ்ந்தான்
முருகன்; தனக்கு
மூத்தவனை ஆனைமுகனை
மனதால் எண்ணினான்; தன்
முன் தோன்றப் பண்ணினான்;

தம்பியின்
துயர் தீர்க்கத்
துணை புரிந்தான்
தும்பிக்கையான்;

ஆனை வந்தது;
அலறினாள் வள்ளி;
கிழவன் பின்னே ஓடினாள்;
காப்பாற்றக் கெஞ்சினாள்;


'என்னைத் தொடாதே, தள்ளிப் போ' - கிழவன் கத்தினான்;

'ஆபத்துக் காலத்தில்
உதவுவது தானே மரபு' - வள்ளி கெஞ்சினாள்

'ஆனாலும் நான் கிழவனன்றோ'

'ஆண் அன்றோ'

'அதுசரி, ஆனையைத் திருப்பி
அனுப்புகிறேன், என்னை நீ
கல்யாணம் செய்துக் கொள்வாயா'

'ஆனையைத் துரத்திவிடு, நீ
சொல்வதெல்லாம் செய்கிறேன்'

கிழவன் வேண்ட,
காட்டு யானை திரும்பிச் செல்ல,

வள்ளி - 'தாத்தா உன்னை ஏமாற்றிவிட்டேன்' எனச் சொல்ல,
கிழவன் மீண்டும் வேண்ட,
ஆனை மீண்டும் வர,
வள்ளி மீண்டும் கத்த,

'கல்யாணம் செய்து கொள்கிறேன் என்று
சத்தியம் செய்து கொடு'

கிழவர் கேட்க,
வள்ளி சத்தியம் செய்ய,
யானையும், கிழவரும் அங்கிருந்து மறைந்தனர்;

                                                                        ( இன்னும் வருவாள் )

No comments:

Post a Comment