Tuesday, December 6, 2011

வள்ளித் திருமணம் - 3

                                    தினைப்புனத்தில் வள்ளி

வள்ளியை அழைத்தான் நம்பிராஜன்.
தினைப்புனக் காவலுக்கு
அவள் செல்ல வேண்டுமென்றுத் தெரிவித்தான்;


      காட்டுக்குச் செல்ல வேண்டும் நீ,
      காவலுக்குச் செல்ல வேண்டும் நீ,
      தினைப்புனத்தைக் காவல் காக்க வேண்டும் நீ,
      காக்கை கிளி மைனா போன்ற பறவைகளை
      கவண்கல் கொண்டு எரிந்திடவேண்டும்,
      அவைகளைத் துரத்திடவேண்டும்,
      வள்ளி நீ காக்க வேண்டும்,
      கவனமோடிருக்க வேண்டும்,
      காவல் புரிய வேண்டும்,
      தினைப்புனம் செல்ல வேண்டும்;


“துணைக்கு என் தோழிமார் வேண்டும்,
கூப்பிடு தூரத்தில் அண்ணன்கள் வேண்டும்,
இவை போதுமே, வேறென்ன வேண்டும்;
காவலுக்குச் செல்கிறேன்,
தந்தையே, தங்கள் ஆணை வேண்டும்” என்று
சிரம் தாழ்த்தி நின்றாள்
வள்ளி;

அண்ணன்மார் வள்ளியையும்
அவள் தோழிகளையும்
தினைபுனத்திற்கு அழைத்து வந்தனர்;
அவர்கள் அமர, பறவைகளைத் துரத்த
இடமைத்துத் தந்தனர்;
கவண்கல் எறியப் பயிற்றுவித்தனர்;
வேறேதேனும் தேவைப்பட்டால்
ஒருகுரல் தந்தால்
ஓடோடி வருவோம் எனச்சொல்லித்
தம் வழி சென்றனர்;

புதிய இடம் பரவசம் தந்தது,
புதிய வேலை சுறுசுறுப்புத் தந்தது;
வயல் வெளி, காற்று ஆனந்தம் தந்தது;
ஆடினார்கள், பாடினார்கள்,
ஆவலில் கூத்தாடினார்கள் வள்ளியும் அவள் தோழியரும்;
பறவை அண்டினால் போதும், அதைப்
பாடாய்ப் படுத்தினார்கள்;

வள்ளியை,
தன் நெஞ்சம் கொள்ளைக் கொண்டக்
கள்ளியை,
அவள் தினைப்புனம் காவல் காக்கும்
அழகை, தன்
மனக்கண்ணால் கண்டு ரசித்தான் முருகன்,
முன்னொருகாலம் தன்னை
மணந்துகொள்ளக் கெஞ்சியவளை
வேடவப் பெண்ணாகப் பிறந்துவருவாய் *,
அப்பொழுது உன்னை மணக்க நான் வருவேன் என்று
வாக்குத் தந்த
வடிவேலன்;

                                                                        ( இன்னும் வருவாள் )
____________________________________________
* refer link

2 comments:

  1. its nice to know that women got the power at those times and they were working and helping their family

    -Gopi

    ReplyDelete