Monday, December 5, 2011

வள்ளித் திருமணம் - 2

வேட்டை நடந்தது;
சிங்கத்தைக் கொன்றனர்; இன்னும்
சில மிருகங்களைக் கொன்றனர்;

                                    குழந்தை வள்ளி

அருகே ஒரு இடத்தில்
அநேகம் பேர் ஏதோ குரலெழுப்ப
அரசனும்
அவன் பிள்ளைகளும்
அங்கே ஓடிச் சென்றனர்;
அழகான பெண் குழந்தை ஒன்று
அங்கிருக்கக் கண்டனர்;
அதிசயித்தனர்;
அரசனிடம் ஒப்படைத்தனர்;
அனேக நாட்களாய்
அவனுக்குப் பெண் பிள்ளை இல்லை என்ற குறை இருக்க,
அதைத் தீர்க்கவே
ஆறுமுகன் இந்தப் பெண்ணை
அனுப்பியிருக்கிறான் என்று எண்ணினான்;
அக்குழந்தையை அவன்
அரசியிடம் தந்தான்;

வள்ளிக்கிழங்கு பயிரிடப்பட்ட
வயலில் கிடைத்தப் பிள்ளைக்கு
'வள்ளிக்கொடி' என்றுப் பெயரிட்டான்;
வாஞ்சையோடு வளர்த்துவந்தான்;


பிறிதொரு சமயம்;

பறவை இனங்கள் கிளி,மைனா,புறா
போன்றவை நன்றாய் விளைந்தப்
பயிர்களைச் சேதப்படுத்தின;
தினைப்புனத்தைக் காவல் காக்க
ஆர் செல்வதென
ஆலோசனைச் செய்தனர்,
நம்பிராஜனும் அவனை
நம்பி வாழும் ஊர்ப்பெரியவர்களும்;

அக்கம் பக்கத்து வயல்களுக்குப்
பெண்களே காவலிருப்பதால்
தினைப்புனக் காவலுக்கு
வள்ளியை அனுப்பலாமென்று
முடிவுசெய்தனர்;

                                                                        ( இன்னும் வருவாள் )

No comments:

Post a Comment