Saturday, December 10, 2011

வள்ளித் திருமணம் - 7

'கானகத்திலிருக்கும் காரிகையே,
புல் மேயாத மான், புள்ளி மான்,
நல்ல ஜாதி மான்,
சாயாத கொம்பிரண்டிருந்தாலும்
தலை நிமிர்ந்துப் பாயாத மான்,
அம்மனைத் தேடி வந்தேன் பெண் மானே'

'உம் மொழியும் சரியில்லை,
முழியும் சரியில்லை
வேட்டைக்கேற்ற மான் மலையில்,
இந்த மான் நம்பி தந்த மான்,
தைரிய மான்,
உமது வலைக்கு அகப்படா மான்,
இவ்விடம் விட்டுச் சென்று விடும்'

'ஏ ! பெண்ணே, உனைக் கண்டதும்
என்னுள் மாற்றங்கள்,
ஏகப்பட்ட உணர்ச்சிகள்'

பூங்குயிலே,
உன் மேல் மோகம் வந்ததடி,
வேகமாய் உன்முன் வந்தேனடி,
தினமும் உன் நினைவில் உருகி வாடுகிறேனடி,
மன்மதனின் கணைகள் எனைப் பாடாய்ப் படுத்துதடி

எந்நாளும் உன்னை மறவேன்,
உத்தமியே உனைவிட்டு விலகேன்,
உறுதியாகச் சொல்வேன்,
என்னோடு வந்திடு,
என் வேதனைக்கு
மருந்திடு’;

'பித்து பிடித்தவனே,
புறம் சென்றுவிடு;
என் அண்ணன்மார்கள் உன்னை
இரண்டாகப் பிளந்து
நரி பருந்து இவற்றிற்கு
உணவாக்கி விடுவார்கள் உன்னை
ஜாக்கிரதை'


'என்னோடு சரசமாட வா'
'வீண்மொழி பேசாதே போ'
'உன் பருவம் வீணாகலாமா'
'சீச்சி தகாத வார்த்தைகள் பேசாது, தள்ளிப்போ'

'பெண்ணே உனக்குத் துணையிருப்பேன்,
நீ இட்ட வேலைகள் செய்வேன்,
பறவைகளைத் துரத்துவேன்,
வேறென்ன வேண்டும் உனக்கு,
சொல் செய்கிறேன்'

அந்தச் சமயம் வள்ளியின்
தந்தையும்,
தமையரும் வரவே,
தன் வீரம் காட்டத்
தக்கத் தருணம் பின்வரும் என்று,
வேங்கை மரமாய் உருமாறி
மறைந்து நின்றான்
வேலவன்;

                                                                        ( இன்னும் வருவாள் )

No comments:

Post a Comment