Friday, December 2, 2011

மெய்ப்பொருள் நாயனார் - 3

'இமாலயத்திலிருந்து நான்
இங்கே வந்திருக்கிறேன்;
இப்பொழுதே காண வேண்டும்
இந்நாட்டு அரசனை' எனச்
சொல்லி, தத்தன்
சொல்லைச் செவியில் கொள்ளாது
தொடர்ந்து சென்றான் கொடியவன்;

அடியவர் உள்ளே வர
அரசியார் தன் மன்னவனை எழுப்ப,
அரசன் கோபம் ஏதும் கொள்ளாது
அடியவரைத் தொழுது
அமரச் செய்தான்;
வந்த விஷயம் சொல்ல வேண்டினான்;

சிவனடியார் வேடத்தில் வந்தவன்
'சிவன் முன்னம் அருளிய பூசை வழிமுறைகள்
சிலவற்றைச் சொல்ல வந்திருக்கிறேன்,
தனிமையில் சொல்ல விரும்புகிறேன்' என்றான்.


      பேறெனக் கிதன்மேல் உண்டோ
        பிரானருள் செய்த இந்த
      மாறில்ஆ கமத்தை வாசித்
        தருள்செய வேண்டு மென்ன
      நாறுபூங் கோதை மாதுந்
        தவிரவே நானும் நீயும்
      வேறிடத் திருத்தல் வேண்டும்
        என்றவன் விளம்ப வேந்தன்.


அரசி அங்கிருந்து சொல்ல,
அரசன் கை கூப்பி
அருகில் நிற்க,
அச்சமயம் முத்தநாதன்
அவன்திட்டப்படி கத்தியை எடுத்தான்;
அரசன் நெஞ்சில் குத்தினான்;
அடியவன் வேடத்தில் வந்த
அந்தக் கொடியவன் செயலை எதிர்க்காது,
அசையாது நின்றார்,
அப்படியேத் தரையில் சாய்ந்தார்;

வந்தவர் மேல் சந்தேகக்கண் வைத்து,
வாசலில் காவலுக்கு நின்றிருந்தத் தத்தன்
சத்தம் கேட்டு உள்ளே வந்தான்;
குருதியினிடையே அரசன் கிடப்பதைக்
கண்டான்; தன் வாள் உருவினான்;
அடியவர் வேடத்தில் வந்தக்
கயவனைக் கொல்லப் பாய்ந்தான்;
'தத்தா நில்' அரசன் ஆணையிட்டான்,
'அவன் நம்மில் ஒருவன், நம்மைப் போல் ஒருவன்,
அந்தச் சிவனின் அடியவர்களில் ஒருவன்,
சிவனடியார் வேடத்தில் இருப்பவனைச்
சிரச் சேதம் செய்வது கொடியப் பாவச்
செயலாகும்' என்று சொன்னார்;

                                                                        ( தொடரும் )

No comments:

Post a Comment