Monday, December 12, 2011

வள்ளித் திருமணம் - 9

நம்பிராஜன் வள்ளியிடம்
அம்முதியவருக்கு
எல்லா உதவியும்
செய்யச் சொல்லி தன் வழி சென்றான்;

வாருங்கள் தாத்தா, அமருங்கள்;
நீயும் அருகில் அமர்வாய் குழந்தாய்;
நீண்ட வெள்ளைத் தாடி, கஷ்டமாய் இருக்கோ
தாடி என்றாலும் கஷ்டம், வாடி என்றாலும் கஷ்டம், போடிப் பெண்ணே;
கோபிக்காதே தாத்தா, என்ன வேண்டும் சொல்;
பசிக்கிறதே, தின்ன என்ன இருக்கு;
தினைமாவும் தேனும் இருக்கு, தின்னு பசியாறு;

கிழவர் தினைமாவு தின்கையில், விக்கலெடுக்க

'தண்ணீர் தா, என்
தாகம் தீர்,
தாகம் தீர்க்க
நீர் தா, அதை
நீ தா'
எனக் காத்த,
வள்ளி தண்ணீர் தர,

'பசி தீர்ந்தது,
தாகம் அடங்கியது,
மோகம் தொடங்கியது;
வாடி பெண்ணே, அருகில் வா,
அணைத்துக்கொள்ள வா, அணைத்துக்கொள் வா'

'தாடி நரைத்தக் கிழம் என்னை
வாடி எனச் சொல்வது முறையோ'

'தாடியில் ஒரு முத்தம் தந்திடு போதும்'

'உளறித் தொலைக்காதீர், ஓடிப் போய்விடும்'

'வள்ளிக்கொடி, எனை அள்ளிக்கோ டி'

'கிழமே, நீ போய்த் தொலையேன்'

'சரி சரி பெண்ணே, கோபம் கொள்ளாதே,
நாம் இங்கு இருப்பது நல்லதன்று,
கொடிய மிருகங்கள் ஏதும் வரலாம்,
வந்துவிடு அந்தப்புரம், அந்தப் புறம்'

'மிருகம் என்றால் பயமோ உமக்கு ?'

'என், நீ பயப்பட மாட்டியோ ?'

'ஒரு மிருகம் தவிர வேறெதுக்கும் அஞ்ச மாட்டேன் நான்'

'அப்படியா, சரி அதை விடு,
வரும் வழியில் யானை ஒன்றைக் கண்டேன்,
அதைக் கண்ட முதல் கலவரமடைந்தேன்,
அதுவே என் கவலை'

'ஆ ! ஆனையா, ஐயோ'

                                                                        ( இன்னும் வருவாள் )

No comments:

Post a Comment