Sunday, December 11, 2011

வள்ளித் திருமணம் - 8

குடும்பத்தார்
வள்ளியின் நலம்
விசாரித்தனர்; பின்
வந்த வழியேத் திரும்பிச்
சென்றனர்;

வேங்கை மரமாய் நின்ற
வேலவன்,
வேடனாய் மீண்டும் உருவெடுத்தான்;

'என் தந்தையைக் கண்டு பயந்தவரே,
உம் வழி பார்த்துச் செல்லும்';
வள்ளி சொன்னாள்;

வள்ளியை வழிக்குக் கொண்டு வருவது
எப்படி என்று யோசிக்கலானான்
வேலவன்;

                                    கிழ வேடத்தில் இள முருகன்

இள வேடன் உருவில்
ஏதும் செய்ய முடியாது,
கிழ வேடமெடுத்தான்
கந்தன்;
தலையில் வெள்ளை முடி;
நடையில் தள்ளாட்டம்;
கையில் ஒரு கோல்;
கண்ணில் மங்கியப் பார்வை;

மெதுவாய்த் தள்ளாடி
நம்பிராஜன் இருக்குமிடமடைந்தார்;
தாங்கள் யார்,
இந்த வழி செல்வதெங்கே
வினவினான் மர நிழலில் இருந்த மன்னன்;
விடை தந்தான் கிழ வேடத்தில் இருந்த முருகன்;

அப்பா நான்
காசியிலிருந்து
கன்னியாக்குமரிக்குச் செல்ல வேண்டும்;
இடையில் எங்கேயோ
வழி மாறி
வந்து விட்டேன்;
பசி தாகம் என்னை
வாட்டுகிறது;

கவலை வேண்டாம் சுவாமி;
அருகிலிருக்கு என் காடு;
காட்டுக்குக் காவலிருப்பவள்
என் மகள்;
அவளிடம் உம்மை
அழைத்துச் செல்கிறேன்;
அவளுமக்கு உண்ண உணவும்,
அருந்த நீரும்
அளிப்பாள் எனச் சொல்லி
அவரை அழைத்துச் சென்றான்
அரசன்;

                                                                        ( இன்னும் வருவாள் )

No comments:

Post a Comment