Thursday, December 8, 2011

வள்ளித் திருமணம் - 5

                                    நாரதர் கலகம்

'மங்கையே உனக்கு இன்னும்
மணமாகவில்லை போலிருக்கிறதே'

'சுவாமி இன்னும் பேசிக்கொண்டிருக்கிறார்கள்
எனைப் பெற்றோர்';

காலாகாலத்தில்
கல்யாணம் பண்ண வேண்டுமே'

'கட்டிக்கொள்ளத் தகுதியுடையவர்
கண் முன் தென்பட்டால்
காலம் தாழ்த்தாது
காரியம் நிறைவேறுமே'

‘நீ சரி என்று சொல்,
நடக்கவேண்டியதை
நான் நடத்துகிறேன்;
இந்த வெயிலில்
தனியாக வாடுவதை விடுத்து
என்னோடு கழுகுமாமலை வந்தால்
வளமாய் வாழ
வழி செய்கிறேன்;
வள்ளி, நீ என்ன சொல்கிறாய் ?'

'துறவி போல் வந்தவர்
தூதாகி நிற்கிறாரா ? இல்லை
தூது,
துறவி வேடத்தில் வந்திருக்கிறதா ?
தங்களுக்கு எதற்கு இந்தச் சிரமம்; எனது
தமையர், தாய், தந்தையர்
காலம் பார்த்துக் காரியம் புரிவர்; நீர்
கவனம் சிதறாதுத் தவம் புரிவீர்';

இதனைத் தொடர்ந்துக்
கந்தன் பெருமை சொன்னார்;
கன்னி அசையாது நின்றாள்;

'சொல்லும் வார்த்தை கேளம்மா, என்
சொல்லைத் தட்டாதேம்மா'

'வேண்டாம் வாதம் தவச்சீலரே, உடனே
எம்மிடம் விட்டுச் செல்வீரே'

'பட்ட அவஸ்தை போதுமம்மா, அந்தப்
பழனி ஆண்டவனை மணந்து கொள்ளம்மா'

'கூட்டிக் கொடுப்பதும்குலத் தொழிலோ,
தனியாய்ப் பெண்ணிடம் பேசும் முறை இதுவோ ?'

'ஞானமில்லாக் குறத்திப் பெண்ணே, நான்
சொல்வதைக் கேட்டால் நலம் உண்டாகும்'

'எம் நலம் விடும்; நீர்
உம் நலம் பார்த்து வந்த வழி செல்லும்'

'அந்தக் கந்தனே
உனக்கேற்றவன்;
அவனையே உனக்கு
மணமுடிப்பேன்;
அதை என் கண்ணால்
கண்டு களிப்பேன்;
ஆறுமுகனே
உன் மணாளன்;
என்றுரைத்தவரே
அங்கிருந்து நகர்ந்தார் நாரதர்'

                                                                        ( இன்னும் வருவாள் )

No comments:

Post a Comment