Thursday, December 15, 2011

அமர்நீதி நாயனார் - 1

காவிரி பாயும் சோழ நாட்டின்
ஒரு பகுதி,
வளம் நிறைந்தப் பகுதி,
மலர்கள் மலர்ந்து
சோலைகள் நிறைந்தப் பகுதி,
வண்டுகள் மலர்களில்
மது அருந்தி ரீங்காரமிட்டு
மகிழ்ந்துக் கிடக்கும் பகுதி;
அப்பகுதியின் பெயர்
பழையாறை.

அந்தப் பழையாறையில்
பிழையேதும் செய்யாது
பிழைப்பு நடத்தி,
வியாபாரம் செய்து வந்தார்
அமர்நீதியார்.

நல்லவர்,
நீதி நேர்மை வழுவாது வாழ்பவர்.
பண்புள்ளம் கொண்டவர்.
பணமிருந்தும்
பணத்தாசை இல்லாது
பணி செய்துவந்தார்.

ஆண்டவன் பாதம் தொழுது,
அவனடியவர்கட்குத் தொண்டு செய்து,
அல்லல் படுவோர் துயர் துடைத்து,
சிவபெருமான் வீற்றியருளும்
திருநல்லூர் எனும்
திருத்தலத்தில் ஒரு மடம் அமைத்து,
தினம் அன்னதானம்
திறம்பட நடக்க ஏற்பாடு செய்தார்;

     மருவும் அன்பொடு வணங்கினர் மணிகண்டர் நல்லூர்த்
     திருவிழாவணி சேவித்துத் திருமடத் தடியார்
     பெருகும் இன்பமோடமுது செய்திட அருள் பேணி
     உருகு சிந்தையின் மகிழ்ந்துறை நாளிடை ஒருநாள்

அடியார்கட்கு
உடுக்க உடை தந்து,
இருக்க இடம் தந்து,
வாழ்ந்து வந்த
அமர்நீதியாரை
அந்த ஆண்டவன் சோதித்து
அருள் செய்ய எண்ணினார்.
அக்கணமே ஒரு பிரம்மச்சரியனாய்
அவதாரமெடுத்து
அமர்நீதியார் இருக்கும் ஊருக்கு வந்தார்.

                                                                        ( தொடரும் )

No comments:

Post a Comment