அழகான சேதி நாடு;
அந்நாட்டின் தலைநகரமாம் திருக்கோவலூர் என்ற ஒரு ஊர்;
அந்தகாசுரன் என்ற
அரக்கனைச் சிவன்
அழித்த ஊர்
அந்த ஊர்;
அதனாலேயே சிவபக்தி
அளவுக்கதிகமாய் நிரம்பி வழிந்த ஊர்
திருக்கோவலூர்.
மக்கள் சேவையே அந்த  
மகேசன் சேவை என்று எண்ணி 
மண் ஆண்டு வந்தான் 
மன்னன் மெய்ப்பொருளார்.
      அரசியல் நெறியின் வந்த 
        அறநெறி வழாமல் காத்து
      வரைநெடுந் தோளால் வென்று 
        மாற்றலர் முனைகள் மாற்றி
      உரைதிறம் பாத நீதி 
        ஓங்குநீர் மையினின் மிக்கார்
      திரைசெய்நீர்ச் சடையான் அன்பர் 
        வேடமே சிந்தை செய்வார். 
செயலில் தவறேதும் இல்லாது, சொல்லில்
சினம் கொள்ளாது, நெஞ்சில்
சிவனைக் கொண்டு,
சிவனடியார்களைக் காத்து, அவர்கட்கு 
சேவை செய்து, 
செங்கோல் வழுவாது ஆட்சிசெய்து வந்தான்;
எதிரியையும் நண்பனாய் எண்ணினான்;
அண்டவர்கெல்லாம் 
அடைக்கலம் தந்தான்;
அப்படியிருந்தும் 
அவருக்கெதிராய் 
முத்தநாதன் என்ற மூடன் 
முணுமுணுத்து வந்தான்; போரில்
மெய்ப்பொறுளாரை வெல்லமுடியாதென அறிந்த 
முத்தநாதன் பொய் சூழ்ச்சி செய்து காரியம்
முடித்து விட எண்ணினான்;
மெய்ப்பொறுளாரைக் கொன்று 
நாட்டைத் தன் வசமாக்கிக் கொள்ள 
நினைத்தான்
நயவஞ்சகன்;
                                                                        ( தொடரும் )
No comments:
Post a Comment