Sunday, November 6, 2011

உத்தவ கீதை - 3

'உத்தவரே,
உறவு மக்கள் என எதன்மீதும்
பாசம் கொள்ளாது,
என்னையே எந்நேரமும்
தியானத்தில் கொள்ளவும்;
என்னைத் தவிர
எல்லாம் மாயை
என்பதை உணரவும்;
மனதை அடக்கு, இந்த
உலகமே நான், இதை அறி;
தொல்லை இல்லை உமக்கு';

'பரந்தாமா, எல்லாவற்றையும்
படைத்தவனே நீ தான்; எதன்மீதும்
பற்று கொள்ளாது துறந்திருக்கப்
பறைபவனும் நீ தான்;
அப்படிப் பற்று கொள்ளாதிருப்பது
எப்படி என்று உபதேசிக்க வேண்டும்,
எந்த தோசமும் இல்லாதவரே,
காலத்தால் அளவிடமுடியாதவரே,
எல்லாம் அறிந்தவரே,
என்றும் அழியாது நிலைத்திருக்கும்
வைகுண்டத்தில்
வசிப்பவரே, நர
நாராயணராக அவதரித்தவரே,
உம்மைச் சரணடைந்தேன்;
எம்மைக் கரையேற்றும்;'

உலகளந்தவன்
உத்தவருக்கு
விளக்கினான்
யது என்ற அரசனுக்கும்,
அவதூதர் என்பவருக்கும்
இடையே நடந்த
வரலாற்றை;

அந்த வரலாறு ...

ஒருமுறை
அரசன் யது
ஆத்மா ஞானம் வேண்டி
அவதூதரை
அணுகினான்;
'அவதூதரே, எல்லாம் அறிந்தும்
ஏதும் தெரியாச் சிறுவன் போல்
இருக்கிறீரே,
அழகிய சரீரம் கொண்டவர்,
அழகாகப் பேசுகிறவர், இருந்தும்
எதன் மீது பற்றிலாது
இருக்கிறீரே,
அறிவிருந்தும் பைத்தியம் போல்
திறிகிரீரே;
காமம் பேராசை போன்றவைகளால்
மக்கள் துன்புற, நீர் மட்டும்
கங்கையில் குளிக்கும் யானை போல்
சஞ்சலமன்றி
இருக்கிறீரே,
இத்தனை ஞானம்
கிடைத்தததெப்படி உமக்கு, அதை
இயம்ப வேண்டும் எமக்கு;'

அவதூதர்
அவருக்கு
அறிவுறுத்தியது ...

                                                                        ( கீதை தொடரும் )

No comments:

Post a Comment