Friday, November 25, 2011

கண்ணப்ப நாயனார் கதை - 6

இன்னும் சோதிக்க
இறைவன் எண்ணினார்;
இன்னொரு கண்ணிலிருந்து
இரத்தம் வரவழைத்தார்;

பார்த்தான் திண்ணன்;
பதறாது நின்றான்;

உதிரம் நிற்கும்
உபாயம்
உணர்ந்தவனன்றோ அவன்;

இன்னொரு கண் இருக்க
கவலை
எதற்கு எனக்கு என்று
எண்ணினான்;

இன்னொரு கண்ணைத் தருவேன்,
இரத்தம் வருவதைத் தடுப்பேன்
என்றுரைத்தவாறு தன்
இன்னொரு கண்ணைப் பிடுங்க
எண்ணினான்;
அப்பொழுது தான் ஒரு உண்மை
உணர்ந்தான்;
என் இன்னொரு கண்ணையும்
எடுத்து விட்டால்,
எப்படி வைப்பேன்
எம்பெருமானுக்குச் சரியான இடத்தில்
கண்ணை ?
இடது கண்
இருக்கும் இடம்
எனக்கு எப்படித் தெரியும்
என்று சிந்திக்கத் தொடங்கினான்;

இடக் கண்
இருக்கும் இடத்தில் தன்
கால் விரல் பதித்துக் கொண்டான்;
கண்ணை நோண்ட
கணை எடுத்தான்;

அப்பொழுதே ஒரு குரல்,
அங்குக் கேட்டது;
'கண்ணப்பா நில்,
கடவுள் உனக்கு எதிரில்;
காயம் இல்லை,
கவலை கொள்ளத் தேவை இல்லை;
உன்
அன்பை
அனைவருக்கும்
அறிவிக்க யாம்
ஆடிய ஆட்டமிது';

சிவன் வந்தான்;
தனக்குக் கண் தந்த
திண்ணப்பனுக்குக் 'கண்ணப்பன்' என்றுத்
திருநாமம் தந்தான்;
தூய அன்பைத்
துணை கொண்டுத் தொழுவோர்
துயர் துடைக்கப் பரமன்
துணை செய்வான் என்றறிவித்தான்;

கண்ணப்பன் என்ற திண்ணப்பனின்
கதை படிப்போருக்கெல்லாம்
கைலாய மலை வாழும் ஈஸ்வரன்
கிருபை கிடைக்குமென்பது நம்பிக்கை;

                                                                           ஓம் நமசிவாய

No comments:

Post a Comment