கண்ணனெனும் கருந்தெய்வம்
      
கரு நீலக் 
கண்ணனோடு
களிப்போடிருக்கவே இந்த 
அவனியில் நான் 
அவதரித்தேன்;
என் கண்ணனையும்
எனையும் பிரிக்க 
எண்ணுவது 
புண்ணில் 
புளியைப்
பிழிவது
போன்றது;
கண்ணன் இல்லாது
நான் வாழ்வதேது;
கண்ணனைத் தவிர
வேறு நினைவேது;
என் மேல் இரக்கம் கொள்ளாது
எங்கோ இருந்து கொண்டு
எனைக் கொல்கிறான்;
விரக தாபத்தில் எனை
வதைக்கிறான்;
அவன் திருமேனியில் அணிந்த
ஆடை தாருங்கள்; 
அதை விசிறி 
அந்தக் காற்றே,
மாதவனைப் பிரிந்து தவிக்கும்
எனக்கு மருந்து;
பாலா லிலையில்
      
பாலகனாய்
ஆலிலையில் துயில் கொண்டவனே
என் துணையாகக் கனவு கண்டேன்;
அவனிடம் நான் என் 
மனதைப் பறிகொடுத்தேன்;
ஆயர்பாடியில் 
இடையர்களின் 
இடையில் பிறந்தவன்,
ஆதிசேசன் மேல்
பள்ளி கொண்டவன், 
அந்தக் கண்ணனிடம் சென்று
இந்தக் கோதை விரக தாபத்தில் 
தவிப்பதைச் சொல்லி, 
அவன் கழுத்தில் இருக்கும் 
குளிர்ந்த துளசி மாலையைக் 
கொண்டு வந்து, என்
குழலில் சூட்டுங்கள்;
மாதவனின் அந்த மாலையே எனக்கு 
மருந்து;
No comments:
Post a Comment