Thursday, November 24, 2011

கண்ணப்ப நாயனார் கதை - 5

அனுதினமும் எம்பிரானுக்குப்
ஆத்மார்த்த பூசை செய்யும் பூசாரி
ஆலயம் அசுத்தம்
அடைவது எங்கனம் என்று
அறிய, தனக்குத் தெரிவிக்க
அந்தப் பரமசிவனை வேண்டினார்;
ஆண்டவனும்
அவர் கனவில் தோன்றினார்;
'அஞ்ச வேண்டாம், என்மேல்
அளவில்லாத அன்பு கொண்டவன் செயல் தான்
இது;
என் சிந்தனையே
எப்பொழுதும் கொள்வதால் நேர்ந்தது அது;
அவன் அன்பை
விரும்புது என் மனது;
நாளை ஒரு தினம்
அவன் காட்டும் அன்பை
அருகிலிருந்து,
ஆனால்
அவன் காணாதவாறு மறைந்திருந்துக் காணவும்’
கனவில் சிவன் சொல்ல, அதற்குக்
கட்டுப்பட்டுக் காரியம் செய்தார் பூசாரி;

ஆண்டவன் மேல்
அன்பு கொண்டு
அவன் அங்கேயே இருப்பதில்
அன்று ஏழாவது நாள்.
அரிய பொருட்களையெல்லாம்
அள்ளி எடுத்துவந்து
ஆசைப்பட பூசை செய்ய
ஓடோடி வந்தான் திண்ணன்.

பூசாரி மறைந்திருந்துப் பார்க்கப்
பூசை செய்தான் திண்ணன்;
அவன் அன்பைச் சோதிக்க
ஆசைப் பட்டான்
அர்த்தநாரீஸ்வரன்;

திண்ணன்
உள்ளே நுழைகையில் தன்
வலது கண்ணிலிருந்து ரத்தம்
வரவழைத்தான்
உமா மகேஸ்வரன்;
பார்த்தான்,
பதறினான்,
செய்வதறியாது
திகைத்து நின்றான்
திண்ணன்;
ஏதாவது மிருகம்
எங்கிருந்தாவது வந்திருக்குமோ
என்று இங்கும் அங்கும் தேடினான், ஓடினான்;
ஏதும் தவறு நேர்ந்திருக்குமோ
என்று நினைத்து அழுதான்;
காட்டிலிருந்து மூலிகைகள்
கொண்டு வந்தான், சிவனின்
கண்ணில் பிழிந்து பார்த்தான்;
ரத்தம் நிற்கவில்லை;
நிஜமாய் நேர்ந்திருந்தால் தானே
நிற்பதற்கு,
பொய்யாய்ப் பொங்கிய ரத்தம்
எங்கிருந்து நிற்கும் ?

யாரோ என்றோ சொன்ன
'கண்ணுக்குக் கண், கைக்குக் கை'
என்ற சொற்றொடர் நினைவுக்கு
வந்தது;
துள்ளி எழுந்தான்
திண்ணன்;
தன் வலது கண்ணை
அம்பு கொண்டு நெம்பி, கிழித்து
வெளியிலெடுத்தான்; சிவனின்
வலக் கண் மேல்
வைத்தான்; ரத்தம்
வருவதும் நின்றது; திண்ணனின்
வருத்தமும் நின்றது;

இன்னும் சோதிக்க
இறைவன் எண்ணினார்;
இன்னொரு கண்ணிலிருந்து
இரத்தம் வரவழைத்தார்;


                                                                        ( கதை தொடரும் )

No comments:

Post a Comment