Wednesday, November 9, 2011

உத்தவ கீதை - 6

விட்டில் பூச்சி,
விளக்கின் ஒளி
விரைந்தழைக்க அதனோடு
விளையாடித் தன்
வாழ்வை இழக்கும்; அதுபோல் மக்கள்
பிறபொருட்கள் மேல்
பற்று கொண்டால்
அழிவர் என்பது
விட்டில் பூச்சி எனக்கு
வழங்கியப் பாடம்;

தேனீ, மலர் தோறும் பறந்து
தேன் சேகரிக்க ஒருநாள் வேடன் அத்
தேனை அபகரித்துக்கொள்கிறான்;
தேனைச் சேகரித்தத் தேனீ
தேனைப் பருகாமலேயே அதை இழப்பது போல்,
தேவைக்கதிகமாய்
தேடிப் பொருளீட்டி வைத்தால் இழக்க நேரிடுமேன்பதைத்
தேனீ எனக்குச் சொல்லித் தந்தது;

யானை,
வலிமையுடன்
வனத்தில் இருந்தாலும்,
ஆண் ஆனைக்கு பெண்
ஆனை மேல்
ஆலாதிப் பிரியம்.
ஆனையைப் பிடிக்க எண்ணுவோர்
ஆண் ஆனை வரும் பாதையில் பெண்
ஆனையை நிற்கவைத்து இடையில்
அகண்ட பள்ளம் தோண்டி யானையை
அகப்பட வைப்பார்;
அதுபோல் பெண் பின் சுற்றுபவர் துயரில்
அகப்பட்டு வருந்த நேரிடுமென்ற பாடம்
ஆனை எனக்கு
அறிவுறுத்தியது;

வேடன், தேனடைகளை
வேட்டையாடி வருமானமீட்டி
வாழ்வான்;
தேவைகதிகமாய்த்
தேடி வைத்த பொருளைத் தேனீ
வேடனிடம் இழப்பதுபோல்,
தான் அனுபவிக்காது உலோபி
ஈட்டி வைக்கும் பொருளை யாரோ
எடுத்துக்கொள்வர்;
வேடனிடம்
சீடனாய் இருந்து
கற்றப் பாடம்;

இனிய இசை ஒலிக்கும் திக்கு நோக்கித் தன்
இரு காதுகளையும் நீட்டி மெய் மறந்து நிற்கும் மான்.
இதுவே தக்க தருணமென்று
இமை மூடும் நேரத்தில் வலை வீசிப் பிடிப்பர் ஆண்.
இறைவனின் சிந்தை
இல்லா வேறெதிலும் எண்ணம் செலுத்தினால்
இதுபோல் அவதி நேருமென்று
சொல்லித் தந்தது மான்;
கற்றுக் கொண்டது நான்;


அவதூதர்
அரசன் யதுவிற்கு
அறிவித்ததை துவாரகையின்
அரசன் கண்ணன் தன்
அன்பிற்குப் பாத்திரமான உத்தவருக்கு
அறிவுருத்தினான்;

                                                                        ( கீதை தொடரும் )

No comments:

Post a Comment