Monday, November 7, 2011

உத்தவ கீதை - 4

'அரசே,
அநேக பேர்கள் எனக்குக் குருவாகி
ஆத்மா ஞானம் கற்பித்தார்கள்;
அவர்களிடம் கற்ற ஞானத்தை
அரசர் தங்களுக்கு
அடியேன் கற்பிக்கிறேன்;

மனிதம் மிருகம் எல்லோராலும்
மிதிபடுகிறது;
தோண்டத் தோண்டத் துன்பம்
சகித்துக் கொள்கிறது;
மற்றவர்களுக்குத் தேவையான
எல்லாவற்றையும் தருகிறது இந்த
மண் என்ற பூமி;
இதுவே எனது முதல் குரு;
மக்கள் வருத்தியதை
மண்மாதா மறக்கிறாள்;
மாறாக நெல் கனி பல தருகிறாள்;
துன்பம் தருவோருக்கு
இன்பம் தரவேண்டுமென்பது
இப்பூமியிடமிருந்து நான் கற்ற பாடம்;
உபத்திரவம் செய்வோர்க்கும்
உபயோகமாய் இருப்பதே இதன்
உள்ளர்த்தம்;

வாயு, உடலென்ற நாம்
வாழ உறுதுணையாயிருக்கிறது;
உடல் இன்ப துன்பத்தில்
சிக்குண்டாலும், பணம் பொருள் மேல்
பற்றுகொண்டாலும் வாயு என்ற ஆத்மா
இதிலெல்லாம் அகப்படாமல்
தனித்திருக்கிறது;
அதுபோல் ஞானம் வேண்டுபவன்
தேவையில்லாத பொருட்கள் மேல்
சிந்தை கொள்ளது
தனித்திருக்கவேண்டுமேன்பது
வாயு எனக்கு
வழங்கியப் பாடம்.

ஆகாயம் எங்கும் நிறைந்துள்ளது;
அளவிட முடியாதது;
எதனோடும்
எள்ளளவும் தொடர்பு இல்லாதது;
அதுபோல் ஆன்மாவும்
தனித்து ஒரே நிலையில் இருக்கவேண்டுமேன்மது
ஆகாயம் எனக்கு
அறிவித்த பாடம்.

தண்ணீர்
தனக்கென்று ஓர் நிறமற்றது;
தன்னை நாடி வந்தோர்க்கு
தன்னலம் பாராது நலம் செய்வது போல்,
ஆத்மா ஞானியர்
அண்டுவோர் பாவங்களைப்
போக்க வல்லவர்;
இதனை எனக்கு உணர்த்திய
தண்ணீரும் எனக்கு ஒரு குரு;

இன்னும் சொன்னது ...

                                                                        ( கீதை தொடரும் )

No comments:

Post a Comment