Wednesday, December 14, 2011

வள்ளித் திருமணம் - 11

கிழவனை மணக்க
சம்மதம் சொன்னதை எண்ணி
கன்னி வள்ளி கலங்கினாள்,
புலம்பினாள்;

வேலனே,
உன்னை விவாகம் செய்ய
வேண்டி இருந்தேனே,
தாடி மீசை நரைத்தக் கிழவனைத் தொட்டு,
சத்தியம் செய்து விட்டேனே,
ஐயகோ, நான் இனி வாழ்வது வீணே;

வள்ளி
வருந்திக் கிடக்கையில்
வடிவேலன் தன்
பன்னிரண்டு கரங்களோடு
தரிசனம் தந்தான்.

'தினைபுனத்து வள்ளியே, என் நெஞ்சைக்
திருடியக் கள்ளியே,
முன் வேடனாய் வந்தவனும் நானே,
முடி நரைத்தக் கிழவனாய் வந்தவனும் நானே,
உன்னிடம் சத்தியம் பெற்றவனும் நானே,
நீ கலங்குவது வீணே,
இனி என்னோடு தான் உன் வாழ்வே';


     முருகா ! முருகா ! முருகா ! - முத்துக்
     குமரா வருக முருகா !
     மயில் ஏறி வந்தாயோ முருகா - ஏன்
     மகளைக் காண வந்தாயோ முருகா,
     வள்ளியை மணக்க வந்தாயோ, எங்களை
     வாழ்த்தி அருள்புரிய வந்தாயோ,
     முருகா ! முருகா ! முருகா ! - நாங்கள்
     உன்னடி பணிந்தோம் குமரா !!!


வள்ளி, ஆறுமுகன் பாதத்தில்
விழுந்து வணங்க,
நம்பிராஜனும் அவர் புதல்வர்களும்
அருள்புரிய வேண்டி நிற்க,
நாரதர் வர,
நல்லாசி தர,
முப்பத்து முக்கோடி தேவர்களும்
பூ மழைப் பொழிய,
சுபமாய் நடந்தேறியது
சுப்பிரமணியன் வள்ளி திருமணம்.


வள்ளி முருகன் திருமணத்தை
வாசிக்கும் எல்லோருக்கும்
வளமான / நலமான வாழ்வு கிட்ட
வழி செய்வான்
வடிவேலன்;

          வாழ்க வளமுடன் !

2 comments:

  1. keep writing boss... you are simply great
    --- Gopi

    ReplyDelete
  2. கோபி,
    ஆட்டிவிப்பவன் அவன்;
    ஆடுவது மட்டும் நாம்;

    ReplyDelete