Monday, July 18, 2011

எல்லாம் மறந்தாச்சி

எல்லாத்திறமைகளையும் - நாம்
என்றோ மறந்தாச்சி;

பணமே பெருசாச்சி;
பழமை எல்லாம் துறந்தாச்சி;
காடெல்லாம்
வீடாச்சி;
வீடெல்லாம்
காசாச்சி;

வயலில் உழைத்தது மறந்தாச்சி;
எல்லாக் கலைகளையும்
என்றோ
ஏற்றுமதி செய்தாச்சி;
அவன் தந்த பிச்சைக்காசை
பெரிதாய்ப் பார்க்கத் தொடங்கியாச்சி;
பொருள் உற்பத்தி மறந்து,
பணம் கொடுத்து
பொருள் வாங்கப் பழகியாச்சி;
மூலம் நமதென்பதை
மறந்து ரொம்ப நாளாச்சி;
பணம் ஒன்றே எல்லாவிடமும்
பரவியாச்சி;

எல்லாவற்றுக்கும்
எவனையோ
எதிர்பார்த்து
ஏமாந்துப்
பழகியாச்சி;

சுற்றுச்சூழலை
பாதிக்கும்
தொழிலெல்லாம் நம்மிடம்;
அதனால் கெடுவதெல்லாம்
நம் நாடு;
காற்றெல்லாம் கந்தகம் - நம்
கனவெல்லாம் கருப்பு;

ஒன்றும் புரியாது
ஒதுங்கிக்கிடக்கிறோம்;
ஒன்றாய் இணைந்து வாழ
மறந்துக்கிடக்கிறோம்;

மிச்சம்
இருப்பதென்னவோ
பணமும்,
உயிரும்
மட்டுமே;

வந்தே மாதரம் !!!

1 comment: