Friday, July 29, 2011

ஜெயதேவா - கீதா கோவிந்தம் - 10 part 3

தந்திரக்காரக் கண்ணன் - part 3

குயிலின்
குரலாய்க்
கொஞ்சிப் பேசும் ராதே,
தரையில் மலர்ந்த
தாமரை போன்றுன்
பாதங்களே எனைப்
பரவசப்படுத்தும்
பலவற்றுள் முதன்மையானது;
அழகான
அந்தப் பாதங்களை இன்னும்
அழகாக்க மருதாணி
அப்பிவிடட்டா;
ஆனந்தத்தில்
ஆழ்த்தும் உன்னை;
சம்மதி, செய்கிறேன்;

குயிலின்
குரலாய்க்
கொஞ்சிப் பேசும் ராதே,
தரையில் மலர்ந்த
தாமரை போன்றுன்
பாதங்களே எனைப்
பரவசப்படுத்தும்
பலவற்றுள் முதன்மையானது;
அழகான
அந்தப் பாதங்களை இன்னும்
அழகாக்க மருதாணி
அப்பிவிடட்டா;
ஆனந்தத்தில்
ஆழ்த்தும் உன்னை;
சம்மதி, செய்கிறேன்;

என் காதலே,
மென்மையான உன்
பாதத்தை என்
தலையில் வைத்தெனை
தன்னியனாக்கு;
காமதேவனின்
கனல்கலெனைக்
காய்ச்சி எடுக்கிறது;
காமக்
கடலில் என்னுடலைக்
கரையேற்ற துணைவா;
காமனின்
சோதனைகளைச்
சமாளிக்க என்னுடன்வா;

No comments:

Post a Comment