Wednesday, July 27, 2011

ஜெயதேவா - கீதா கோவிந்தம் - 9

ராதைக்கு தோழியின் ஆலோசனை

ராதே,
கண்ணன் மீது
கொண்ட கோபத்தால் சண்டையிட்டு,
காமனை எதிர்கொள்ள முடியாது
கலங்கிநிற்பவளே,
காதல் கோட்டை இடித்தவளே,
கவலையே சூழ்ந்திருப்பவளே,
இத்தனைக்கு இடையிலும்
கண்ணனின் துரோகத்தை
எண்ணியே இருப்பவளே,
சண்டைக்குப்பின் சமாதானம் கொள்.
உன் தோழி நான்
உரைப்பதைக் கேள்;

முட்டாள் பெண்ணே, உன்
முட்டாள்தனத்தை வெளியே
காட்டாதே;
எக்காலம்
உன்காலமோ
அக்காலம்
உனைத் தேடி
வருகிறான்
உன் கண்ணன், இதைத்தவிர
வேறென்ன வேணும் உனக்கு ?

பனை மரத்தின்
பழங்களை விடப்
பெரியதும்,
பானை போன்று
பருத்ததுமானது உன் மார்
பகங்கள், அதைப்
பயனற்றுப்
போக விடலாமா ?
இதைத் தவிர
வேறென்ன வேணும் உனக்கு ?

முட்டாள் பெண்ணே,
மாதவனிடத்திலிருந்து
மறைந்து விலகி நிற்க நினையாதே;அவன்
மிகவும் இனிமையானவன்;
எத்தனை முறை நான்
இதை உன்னிடம்
சொல்லிருப்பேன்;
ஏனிதை ஏற்க
மறுக்கிறாய்;

இப்படியே நீ
செய்வாயானால்
எப்பொழுதும் அழுது
வாழ்கை எனும் கடலில்
மூழ்கிட நேரிடும்; தீர்க்கமான ஒரு
முடிவெடுக்க
முடியாது திணறும்
முட்டாள் பெண்ணே;
நம் தோழியரெல்லாம்
நகைக்கின்றனர் உன்
நிலை பார்த்து;

அமைதி கொள்; கண்ணனை
அனுசரித்துச் செல்; புதிதாய்
மலர்ந்த தாமரை
மலர் போல், எல்லாம்
மறந்து கண்ணனை
நேசி;
உன் வேதனைகளுக்கு
விடை கிட்டும்;

கண்ணன் வருகிறான்;
இதமாய்ப் பேசுகிறான்; பின்னெதற்கு
இத்தனை துன்பப்படுகிறாய் ?

No comments:

Post a Comment