Thursday, July 28, 2011

ஜெயதேவா - கீதா கோவிந்தம் - 10 part 2

தந்திரக்காரக் கண்ணன் - part 2

என் அழகே நீதான்;
உண்மையானவள்,
உத்தமமானவள் நீ;
எனக்கணிகலன் நீ தான்;
என் எல்லாமே நீ;
உனை விட்டு
விலக முடியாது என்னால்;
உறுதியோடு
உரைக்கிறேன்
இனிமையானவள்
இந்த ராதே,
என் இதயம் ஏங்குது,
என்னிடம் வாராது இராதே;

ராதே,
காந்தம் போலக்
கவர்ந்திழுக்குமுன்
கண்கள்
கோபத்தால் நிறம்மாறி
கோவைப் பழமாகியிருப்பதைக்
காண்கிறேன்;
சிவந்திருந்தும் எனைக் காதல்
சிறையில் அடைத்து கருத்த மேனி
சிவந்துபோகச்
செய்யுமெனில்
உன் இந்த எல்லாக் கோபத்தையும்
வரவேற்கிறேன்;

அன்பே,
சிவந்த உன் கண்கள்
கருத்த உன் முலைகளின்
அழகை
அதிகப்படுத்தும்;
அங்ஙனம்
கருத்த முலைகள் என்
கருத்த மார்பில் மோதி நம்
காதலை
காமத்தில்
ஆழ்த்தும்;
அச்சமயம்
அழகாய் வளைந்திருக்குமுன் இடையில்
அணிந்த மணிகள்
அசைந்தசைந்து ஓசை எழுப்பி
அறிவிக்கும்,
காதல் நம்முள் மீண்டும்
கனிந்ததை;

No comments:

Post a Comment