Tuesday, July 19, 2011

ஆண்டாள் திருமொழி - திருமணக்கனவு 1

     வாரண மாயிரம் சூழ வலம்செய்து,
     நாரண நம்பி நடக்கின்றா னென்றெதிர்,
     பூரண பொற்குடம் வைத்துப் புரமெங்கும்
     தோரணம் நாட்டக் கனாக் கண்டேன் தோழீநான்


ஆயிரம் யானைகளுடன்
அழகாய் நாராயணன்
அணிவகுத்து வருவாதாயும்,
அவனெதிரே
அவனை வரவேற்கப்
பூரண மரியாதையுடன்
எல்லாரும் நிற்பதாயும்,
நம் வீதி எங்கும்
தோரணம் கட்டி
இருப்பதாயும்
கனாக் கண்டேன் என் தோழி.

No comments:

Post a Comment