Monday, July 18, 2011

ஆண்டாள் திருப்பாவை - பகுதி 3

கீச்சு
கீச்சு என்று
கத்தும்
குயில்களின்
குரல்கள்
கிருஷ்ணா
கிருஷ்ணா என்றே
நமக்குக்
கேட்கிறதே,
இந்தப் பேச்சின்
ஆரவாரம்
கேட்கவில்லையோ
பெண்ணே,
இன்னும்
உறங்கிக்கிடக்கிறாயே ?
கை வளையல்களும்,
தாலிச் சரடும்
கலகலக்க
கூந்தல் நறுமணம் வீச
நம் குலப் பெண்கள்
மத்தினால் தயிர் கடையும்
ஓசை நீ கேட்கவில்லையோ,
பிள்ளாய் ?
நாராயண மூர்த்தியின்,
அந்தக் கேசவனின்
புகழ் நாங்கள் பாடையில்
படுத்துக் கிடக்காயே,
கதவு திறந்து
வெளியே வாராய் !!!



கீழ் வானம்
வெளுத்துவிட்டது;
எருமைகளெல்லாம்
மேயச்சென்றுவிட்டன;
மற்ற நம் தோழியரை எல்லாம்
போகாது தடுத்து
உன்னை எழுப்பக் கூடி
வந்துள்ளோம்.
எழுந்திராய்ப் பாவையே;
பாடி நாம் நம்
மாதவனை,
வாய் பிளந்து
மல்யுத்தம் செய்தவர்களை
வீழ்த்தியவனைச்
சேவித்தால்
நமக்கிரங்கி
அருள் செய்வான்;
விரைந்து நீ
வாராயோ !!!


தூய மணிமாடம்
சுற்றி விளக்கெரிய
நறுமணமெங்கும் பரவ
துயில் கொண்ட என்
மாமன் மகளே,
எழுந்திராய்;
மாமி, அவளை
எழுப்புவீர்களா ?
உங்கள் மகள்
ஊமையா,செவிடா ?
ஆனந்தமாய் உறங்குகிறாளா ? இல்லை
மந்திரத்தால்
மயங்கிக்கிடக்கிறாலா ?
மாயவன், மாதவன், வைகுந்தன்
போன்று அவன் பல்வேறு நாமங்கள்
சொல்லியே வாழ்ந்திடுவோம்,
வாராயோ !!!

No comments:

Post a Comment