Wednesday, July 20, 2011

ஆண்டாள் திருமொழி - திருமணக்கனவு 9,10

   வரிசிலை வாள்முகத் தெனனைமார் தாம்வந்திட்டு,
   எரிமுகம் பாரித் தென் னைமுன்னே நிறுத்தி,
   அரிமுக னச்சுதன் கைம்மேலென் கைவைத்து,
   பொரிமுகந் தட்டக் கனாக் கண்டேன் தோழீநான்.

என் சகோதரர்கள்
அக்னி வளர்த்து
என்னை முன் நிறுத்திப் பிரார்திப்பதாயும்,
என் கையை
என் கண்ணன் கை மேல் வைப்பதாயும்,
பொறி வைத்துத் தீ வளர்த்துப்
பிரார்த்தனை செய்வதாயும்,
கனாக் கண்டேன் தோழி.

   குங்கும மப்பிக் குளிர்சாந்தம் மட்டித்து,
   மங்கள வீதி வலம்செய்து மணநீர்,
   அங்கவ னோடு முடன்சென்றங் கானைமேல்
   மஞ்சன மாட்டக் கனாக் கண்டேன் தோழீநான்.

எங்கள் உடலில்
குங்குமமும்,
சந்தனமும்
அப்பி எங்களைக்
குளிர்விப்பதாயும்,
மங்கள நீரால்
எங்களைக்
குளிப்பாட்டுவதாயும்
என்னையும்
என் மன்னனையும்
அழகான யானை மேல்
அமர்த்தி
அலங்கரிக்கப்பட்ட
வீதி வழியே
அழைத்துச் செல்வதாயும்
கனாக் கண்டேன் தோழி.

No comments:

Post a Comment