Tuesday, July 12, 2011

திருவெம்பாவை - மாணிக்க வாசகர் 3/3

மானே,
'நாளை உங்களை
நானே உறக்கத்திலிருந்து
எழுப்புவேன்' என்று நேற்றுரைத்தாய்.
அவ்வாறு சொன்ன சொல்லுக்கு
வெட்கப்படாது இன்னும்
விழிக்காது உறங்கிக்கிடக்கிராயே,
பொழுது விடியவில்லையோ ?
வையத்திலிருப்போரும்
வானிலிருபோரும்
அறிவதற்கு அருமையானவன்,
தானே வந்து
நம் எல்லாரையும் ஆட்கொண்டவன்,
அவனைப் பாடிப் பரவசமடையும்
எங்களைக் கண்டும்
வாய் திறவாது
உடல் உருகாது
உறங்கிக் கிடக்கிறாயே ?
எல்லார்க்கும் தலைவனாய்
எழுந்தருளியிருப்பவனை
எங்களோடு இணைந்து பாடிட
எழுந்து
வருவாய்.


ஒப்பற்றவனும்
பெரும்சிறப்புமுடைய எம்
பெருமானின்
புகழ் பாடும் சங்குடன்
சிவசிவ என்ற சொல் சொல்லியே
வாய் திறப்பாய்;
தென்னவன் முன்னே
மெழுகாய் உருகுவோர் பலர்,
அவனை
அரசனென்றும்,
அவனே பெருந்துணைவனென்றும்,
இன்னமுதனென்றும்
பலவிதமாய்ப்
புகழ்வதுண்டு;
காது கொடுத்து
கேட்பாயாக;
இன்னும் உறங்கிக்கிடக்கிராயே;
கல்நெஞ்சக்காரியே,
தூக்கத்தின் பலன்
என்னதானென்று
எடுத்துரைப்பாய்.


சேவல் கூவ,
மற்ற பறவைகள்
குரலெழுப்ப,
வாத்தியங்கள் இசைக்க,
வெண்சங்கு முழங்க,
ஒப்பற்ற
ஒளிப்பிழம்பான
கருணையே வடிவான
சிவபெருமானது
நிகரில்லாப்
புகழைப்
பாடினோம்;
கேட்கவில்லையோ அவற்றை ?
உறங்கிக்கிடக்கிறாயே !
பாற்கடலில்
பள்ளி கொண்ட
பெருமான்
நம் இறைவனிடத்தில்
அன்பு கொண்டதும்
இப்படித்தானோ ?
பேரூழியின் இறுதியில்
தலைவனாய் நின்றவனை,
ஏழைகளின் நண்பனை,
உமை பாகனைப்,
பாடுவாய்.

No comments:

Post a Comment