Monday, August 8, 2011

ஜெய தேவா - கீதா கோவிந்தம் - 7 part 1

வளமான கண்ணன்

தவறு செய்பவன் கண்ணனே,
பிருந்தாவனப்
பெண்கள் எல்லோரையும் வழிமறித்து
பணி செய்யவிடாது
படுத்தியவன் கண்ணன்
என்றே
எண்ணினாள் ராதை;

வட்ட நிலா மெல்ல
எட்டிப் பார்க்கையில்,
குழலோடு கண்ணன்
குறித்த நேரத்தில் வராததினால்,
கடுஞ்சினம் கொண்டாள்
ராதை;

கண்ணன் வராத
காரணமென்ன ?
மனதை
மயக்கும் வாச
மலர்கள்
மலர்ந்த இந்த
மலர்வனத்துக்குள் வராது, வேறு
மங்கை பின்
மயங்கிச் சென்றுவிட்டானோ ?
சொந்தமெனச்
சொல்லி யாரேனும்
சூழ்ந்துகொண்டிருப்பார்களோ ?
வேறுயாரோ சிலரோடு
பாடி,ஆடிப்
பொழுது கழிக்கப்
போய்விட்டானோ ?
ஒருவேளை
எனைத் தேடித் தேடி
எங்கே ராதை
என்று தெரியாது
ஏங்கி அலைகிறானோ ? அல்லது
எனைக் காண விரும்பாது வேறு
எங்கேயோ இருக்கிறானோ ?


கண்ணனிடம்
தூது சென்ற தன்
தோழி சோகத்துடன்
திரும்புவதைக்
கண்டாள் ராதை;
வேறு யாரோ
மங்கை கண்ணனை
மகிழ்விப்பதாய்த் தானே
கற்பனை செய்து
கலங்கினாள்;

No comments:

Post a Comment