Thursday, August 25, 2011

நாச்சியார் திருமொழி - பாசுரம் 1.10

கருப்புவில் மலர்க்கணைக் காமதேவனைக்
கழலினை பணிந்தங்கோர் கரியலற,
மருப்பினை யொசித்துப்புள் வாய்பிளந்த
மணிவண்ணற் கென்னை வகுத்திடென்று,
பொருப்பன்ன மாடம்பொ லிந்துதோன்றும்
புதுவையர் கோன்விட்டு சித்தன்கோதை,
விருப்புடை யின்தமிழ் மாலை வல்லார்
விண்ணவர் கோனடி நண்ணுவரே
.


கரும்பே வில்லும், மலர்க்
கணையும்
கொண்டிருக்கும்
காமதேவனைத் தொழுது,
பாகாசுரனின் வாயைப்
பிளந்த அந்த
பரமாத்மாவை அடைய வேண்டி,
பெரியாழ்வார் எனும் விஷ்ணு சித்தரின்
பெண் கோதை
பாடிய இந்தப்
பாடல்களைப்
படிப்போர்
அந்தக் கண்ணன் திருவடிகளை
அடைந்து,
அவனுக்கு கைங்கரியம் செய்யும்
பாக்கியம்
பெறுவார்;

No comments:

Post a Comment