Wednesday, February 21, 2018

கலாட்டா கல்யாணம் 4



சசி தன் வீட்டில்

'ஜோசியரே ... நான் சசி பேசுறே ... '

'சொல்லுங்க தம்பி, செங்கல்பட்டு வந்திருக்கீங்களா ? '

'பொண்ணு பாத்துட்டீங்கன்னா வரேன் ... ரெடியா?'

'எங்க தம்பி பொண்ணே கெடைக்கமாட்டேங்குது'

'எனக்குத் தெரிஞ்சவங்க ... அவங்க பொண்ணு இருக்கு ... அப்பாம்மாட்ட அழைச்சுக்கிட்டு போய் காமிங்க … ஒங்க கமிஷன் பத்தியும் நான் சொல்லிட்டேன்'

'ஹிஹிஹி'

'நாளைக்கு இல்லே நாளை மறுநாள் உங்களைப் பார்க்க வர்றாங்க, வீட்டுக்கு அழைச்சுக்கிட்டு போங்க, சரியா?'

'காதலா தம்பி ? என்னோட அட்ரஸ் குடுத்துருங்க ... நான் ஒங்க வீட்டுக்கு அழைச்சிக்கிட்டுப் போயி பேசி முடிச்சுடறேன்'

'பேசு முடிக்கறதை அப்புறம் பார்ப்போம்... காட்டிட்டு மட்டும் வாங்க'

'சரீங்க தம்பி'

-------------

சசி அலுவலகத்திலிருந்து

'சுகன்'

'என்னடா ஆபிஸ்ல ஞானி சார் கிட்ட பேசிட்டியா ?'

'ஞானி இல்லேப்பா யோகி, பேசிட்டே, எனக்கு 30% நல்ல பொண்ணு ஒன்னு வேணுமே'

'30% ? பொண்ணு ? நான் இருக்கேனே போதாதா?'

'நீ 50% பா, எனக்கு 30% போதும்'

'ஒன்னும் புரியல ?'

யோகி சாரிடம் பேசியதெல்லாம் விவரித்தான் சசி.

'சசி, என்னோட ப்ரெண்ட் ஒருத்தி இருக்கா, தான்வி ன்னு பேரு, அடங்காப்பிடாரி'

'ஓகே, கொஞ்சம் கர்வம், கொஞ்சம் பணக்காரத் திமிர், ஸ்டைல், எதிர்த்து எதிர்த்து பேசனும்'

'இதெல்லா அவளோட பேசிக் க்வாலிட்டீஸ்'

'வெரிகுட்'

'நாளைக்கு அவ செங்கல்பட் போகமுடியுமா ... கேட்டுச்சொல்லு'

-------

செங்கல்பட்டு ... ஜோசியர் வீடு

'ஹலோவ் ஜோசியரே '

'யாரும்மா?'

'தான்வி ... சசி அனுப்புனாரு ... அவரு வீட்டுக்கு ... போவோமா ?'

'அப்பாம்மா வரலியாம்மா?'

'இந்தாங்க 100 ரூபா ... 5 நோட்டு ... புத்தம் புதுசு ... போலாமா?'

----------

செங்கல்பட்டு ... சசியின் வீடு

'வாங்க ஜோசியரே ... நல்லா இருக்கீங்களா ... பொண்ணு கெடச்சுதா ?' என்று ரகுராமன், சசியின் அப்பா, கேட்க

'கையோட கூட்டிட்டு வந்திருக்கே'

'எங்கே ? ஏங்க முன்னாலேயே சொல்ல மாட்டீங்களா .... கமலம்' தன் மனைவியை அழைத்துக்கொண்டே ரகுராமன் உள்ளே செல்ல,

பின்னாலேயே ஜோசியர் தொடர ...

கொஞ்சம் நேரம் கழித்து ... உள்ளே நுழைந்த தான்வி, 'ஹலோவ்' திறந்திருந்த கதவில் டொக்கினாள்.

'யாருங்கவேணும்?' என்று ரகுராமன் கேட்க

'இவங்க தான் பொண்ணு ஜானகி' என்று ஜோசியர் சொல்ல,

'தான்வி, பையன பாத்துட்டு வரனும்னு அப்பா சொல்லிட்டிருந்தாரு, அதா வந்தேன், சசி தானே பையன் ? இருக்கானா?'

சுருக்கென்றிருந்தது ரகுராமனுக்கு. இருந்தாலும் நம்ப காலமில்லை. 2018 லில்  இருக்கோம் என்று ஞாபகப்படுத்திக்கொண்டார்.

'உள்ளே வாம்மா, இப்படி உட்காரலாம்'  என்று ரகுராமன் சொல்லிக்  கொண்டிருக்கும்போதே தான்வி அங்கிருந்த இருக்கையில் கால்மேல் கால் போட்டுக்கொண்டு அமர்ந்திருந்தாள்.

ரகுராமன் ஜோசியரைப் பார்க்க, அவர் வேறு எங்கேயோ பார்த்துக்கொண்டிருந்தார்.

அதற்குள் உள்ளிருந்து கமலம், சசியின் அன்னை வர, 'சசியை பையன் பார்க்க' என்று ரகுராமன் சொல்லிக்கொண்டே, 'தான்வி ன்னா என்னம்மா அர்த்தம்?' என்று கேட்க

'யாருக்குத் தெரியும், மாத்தலாம்னு கூட யோசிச்சே, ஆனா ப்ரெண்ட்ஸ் லா ஷார்ட்டா ஸ்வீட்டா இருக்கு ன்னு சொன்னாங்க, சரின்னு விட்டுட்டே'

'அப்பாம்மா வரலியாம்மா?' கமலம் ரகுராமனைப் பார்த்துக்கொண்டே தான்வியிடம்  கேட்க

'நான் மொதல்ல ஓகே சொல்லணும்ல, கல்யாணத்துக்கு வந்துருவாங்க, சசியைக் கூப்பிடுங்களேன் பார்த்துட்டுக் கெளம்புறேன்'

'சசி … சென்னைல இருக்கா, காஃபி கொண்டுவா' மனைவியைப் பார்த்துச் சொல்ல

'காஃபில்லா வேணா' என்று இடைமறித்து, 'ஜில்லுன்னு என்ன கெடைக்கு?' என்று தொடர்ந்தாள்.

'மோர் குடிக்குறியாம்மா?'

'மோர் ? அப்டின்னா?'

'வீட்டுல கூடமாட வேலை செய்யமாட்டியா ? இந்த மோர் குடிச்சா ...' கமலம் பேசிக்கொண்டிருக்கும்போதே தான்வி இடைபுகுந்தாள்.

'நான் வெரி சோஷியல், ப்ரெண்ட்ஸ், பார்ட்டி, காலைல ஒருத்தன் பிக்கப் பண்ணுவான், நைட்டு ஒருத்தன் ட்ராப் பண்ணுவான்'

'பேஸ் பேஸ் ... பார்ட்டி ல்லா போறேன்னா ... உனக்கு நல்ல பாட்டு பாட வருமே கரெக்ட்டா?' ரகுராமன் கேட்க

'ராம், எல்லா பார்ட்டிலேயு என்னோட குத்தாட்டம் தான் மெயின் அட்ராக்சன்'

ரகுராமன் கமலம் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

'சமைக்கத் தெரியுமாம்மா ஒனக்கு ?' என்று கமலம் கேட்டாள்

'வீட்ல சமைக்க ஆளிருக்கு,  ரோட்டுல ஒவ்வொரு மூலையிலும் ஹோட்டல் இருக்கு, கையில பணமிருக்கு’

'கல்யாணம் ஆனா சேர்ந்து இருப்பியா இல்லே ...' ரகுராமன் ஒரு ஐயத்துடன் கேட்க

'லுக் மிஸ்டர் … ராம், இன்னும் நான் கல்யாணம் பண்ணனுமா, வேணாமா ன்னு முடிவெடுக்கலே, சசி அதுக்குத் தகுதியானவனான்னு இன்னும் தெரியலே ... வாட்டவர் ... தனியா இருந்தா பெட்டெர்னாலும் வேலை செய்யனும், காஃபி போடணும், சமைக்கணும் இதுக்கெல்லா செலவில்லாம ஆளிருந்தா நல்லதுதானே ... என்ன சொல்றீங்க?' என்று எதிர் கேள்வி கேட்டு, தான்வி தொடர்ந்தாள் ..... 'பை த பை சசி க்கு எவ்ளோ சம்பளம் ?'

'ஒங்க தேவையோட கம்மியாத்தான் இருக்கும்'

'பாஸ்போர்ட் லா இருக்குல்ல அவன்கிட்ட?'

ரகுராமன் ஏதும் பேசாது எழுந்துகொண்டார்.

'ஓகே ராம் நான் யோசிச்சி சொல்றேன், வேணாம்னு சொல்லிட்டா டோன்ட் பீல் பேட், பை கமலம்'

கமலம் திகைக்க,
ரகுராமன் ஜோசியரைப் பார்த்து முறைக்க,
தான்வி அங்கிருந்துக் கிளம்பினாள்.

'சசிக்கு கல்யாணமே ஆகலைன்னாலும் பரவாயில்லை ஆனால் இப்படியொரு பெண், வேண்டவே வேண்டாம்' என்ற நிலைக்கு வந்தனர் அவன் பெற்றோர்.

'ஜோசியரே … அனுப்பிட்டு வாங்க' என்று ரகுராமன் அழுத்திச் சொன்னது ஏன் என்று ஜோசியருக்கு நன்றாகவேப் புரிந்தது.

-----

தான்வி தான் செய்த கலாட்டாவை சுகன்யாவிடமும் சசியிடமும் விளக்கினாள்.

'சுகன் இன்னொரு ரெண்டு மூணு நாள் கழிச்சி ஒங்க அப்பா அம்மாவை சசியோட அப்பா அம்மாவைப் போய் பார்க்கச் சொல்லு, கண்டிப்பா ஒத்துப்பாங்க, கவலை வேண்டாம்'

'தேங்க்ஸ் தான்வி' என்று சுகன் சொல்ல

'சாரி தான்வி உங்களை ரொம்ப கஷ்டப்படுத்திட்டோம்' என்று சசி சொல்ல

'சேச்ச்சே நான்தான் ஒங்க அப்பா அம்மா அந்த ஜோசியர் எல்லாரையும் கலாட்டா பண்ணிட்டே, இன் பாக்ட் நான்ஒங்க கல்யாணத்துக்கு வர முடியாது இப்போ, அவங்களுக்கு அப்புறம் நம்ப ப்ளான்லா தெரிஞ்சிடும்'

-----

மணமக்கள் திட்டமிட்டப்படி, பெற்றோர் ஒருவரை ஒருவர் சந்தித்து பேசி, திருமணத்திற்கு நிச்சயித்து, சசி சுகன்யாவின் திருமணம் மிக விரைவில், தேதி அறிவிக்கப்படும்; மறக்காமல் கலந்து கொள்ளவும்.

-சுபம்-

No comments:

Post a Comment