Monday, February 19, 2018

கலாட்டா கல்யாணம் 3


முன்கதைச் சுருக்கம்: சசி ATM ல் சுகன்யாவைப் பார்த்தான். கண்டதும் காதல். காதலுக்கு வீட்டில் சம்மதம் வாங்குவது எப்படி என்று சசி யோசிக்கலானான்.

x-x-x-x-x

சசியின் அலுவலகம்

அலுவலகத்தில் கூட பணிபுரியும் யோகியை சந்தித்துத் தன் காதலுக்கு வீட்டில் சம்மதம் வாங்குவது பற்றி பேச எண்ணி அவரைத் தொலைபேசியில் அழைத்தான், சசி. பார்த்தவுடன் ஒரு மரியாதை தோன்றுமே, நெற்றியில் விபூதிப்பட்டை, கழுத்தில் ருத்ராட்சக் கொட்டை, பருத்தி ஆடை, ஆடம்பரமில்லாது அமைதியான  உருவம், அவர்தான் யோகி. தொலைபேசியில் அழைத்த கொஞ்சநேரத்தில் யோகியே சசியைத் தேடி வந்தார்.

'என்ன சசி, மிஸ்டு கால் குடுத்தீங்க?'

'அதுஒண்ணுமில்ல சார் ...'

'ஏங்க ஆபிஸ் போன்ல தானே கூப்பிடுறீங்க, அப்புறம் ஏன் மிஸ்டு கால் கொடுக்கறீங்க ?'

'சார் ... மிஸ்டு கால் லா ஒண்ணுமில்ல சார் ... டக்குன்னு கட்டாயிடுச்சி'

'சரி எதுக்குக் கூப்டீங்க?'

'சார் ... நீங்க ஒரு யோகி ... பலவிதப் பிரச்சனைகளை சமாளிச்சிருப்பீங்க, நல்லவரு, வல்லவரு'

'காதல் என்ற மாய வலையில் மாட்டிக்கிட்டீங்க, கரெக்ட்டா ?'

'எப்டி சார்?'

'பின்ன உளர்றீங்களே, தண்ணி போட்டுருக்கணும், இல்லேன்னா கண்ணு மண்ணு தெரியாம காதல்ல மூழ்கியிருக்கணும்'

'தண்ணி பழக்கம் கெடையாது ன்னு ஒங்களுக்குத் தெரியும்'

'செலவு அதிகமாகுமே'

'சார் ... வாங்கித் தர்றாங்க சார் ... நான்தான் குடிக்கறதில்லை '

'சரி எதுக்குக் கூப்டீங்க ? பணம் வேணுமா ?'

'சார் ... பணம்லா இல்லே சார் ... காதல் சம்மந்தமா கொஞ்சம் ஐடியா சொல்லுங்க சார்'

'நான் யோகிங்க, வாழ்க்கைத்தத்துவம் கேட்டீங்கன்னா ஏதாவது சொல்லலாம், காதல்ல நான் என்ன ஐடியா தர முடியும்?'

'சார் ... எங்க வீட்டுல காதலுக்கு ஒத்துக்கமாட்டாங்க, இருந்தாலும் காதலிச்ச பொண்ணை கல்யாணம் பண்ணிக்க எப்படி சம்மதம் வாங்கறது?'

'அப்பாம்மா சம்மதம் முக்கியம்ன்னு நெனச்சீங்கன்னா ... காதலுக்கு அவங்க ஒத்துக்கமாட்டாங்கன்னு தெரிஞ்சிக்கிட்டே ஏன் காதலிக்கறீங்க?'

'சார் ... இப்போ  கல்யாணத்துக்கு எப்படி சம்மதம் வாங்கறது ... அதுக்கு வழி சொல்லுங்க சார்?'

'உம்ம்ம் ... இருகோடுகள் வழி ஃபாலோ பண்ணுவோமா?'

'என்னோட வலி தீருமா ?'

'இப்போ தீரும், ஆனா கல்யாணத்துக்கு அப்புறம் எப்படியும் அடி இருக்கும்?'

'அது எல்லாருக்கும் விழுகிறது தானே சார், எனக்கு மட்டும் ஸ்பெஷல் லா ?'

'தெரிஞ்சிக்கிட்டே குதிக்கறீங்க ?'

'ஆமா சார்'

'கையும் காலும் மூக்கும் கொண்டு ஆடவந்தக் காரணம் ஆடித்தானே சேர்த்து வச்ச பாவம் யாவும் தீரணும் '

'நீங்க யோகி சார் … ஒண்டிக்கட்டை ... தாமரை மேல் தண்ணீர்னு வாழுறீங்க .... நம்மால முடியுதா ? அந்த இருகோடுகள் பத்திச் சொல்லுங்க சார்'

'சொல்றேன், ஒங்க வீட்டுல எப்டி ஜாதகம் பார்ப்பார்களா? '

'வெறும் மனப்பொருத்தம் தான் சார்'

'அப்புறம் என்ன, எங்க மனம் பொருந்தியிருக்குன்னு சொல்லிடுங்க'

'அவங்க பாத்து அடக்கஒடுக்கமா, சொல்பேச்சைக் கேட்குற பொண்ண கட்டிவைக்கணும்னு எதிர்பார்ப்பாங்க சார்'

'அடக்கஒடுக்கமா, சொல்பேச்சைக் கேட்குற ? ஒங்களுக்குக் கல்யாணம் பண்ற ஐடியா அவங்களுக்கு இல்லியோ என்னவோ?'

'சார் நான் காதலிக்கிற சுகன்யாவக் கல்யாணம் பண்ணிக்க என்ன பண்ணனும்?'

'சொல்றேன், வீட்ல எப்படி ஜோசியர் பொண்ணைக் காமிப்பாறா இல்லே கல்யாண ப்ரோக்கர் வருவாரா ?'

'ஜோசியர் ஒருத்தர் இருக்காரு சார், எனக்கு அவரைத் தெரியும்'

'குட், இப்போ இந்த சுகன்யா, ஒரு 60% நல்ல பொண்ணுன்னு வச்சிக்கலாமா ?'

'சார் ... 50% நல்ல பொண்ணு சார்'

'அவ்ளோதானா ? '

'சார் ... நீங்க தானே சார் அதிகமா எதையும் எக்ஸ்பெக்ட் பண்ணக்கூடாதுன்னு அடிக்கடி சொல்வீங்க ? '

'சரி, 50% நல்ல பொண்ணு, ஒரு 30% நல்ல பொண்ண ஜோசியர் கிட்ட ஒங்க அப்பாம்மாவுக்குக் காட்டச் சொல்லுவோம், பொண்ணை ஒங்க வீட்டுல ரகளை பண்ண சொல்லுவோம், அப்பாம்மா முடியாது ன்னு சொல்லுவாங்க, மூட் அவுட் ஆவாங்க, அடுத்து ஒங்க 50% பொண்ணு விவரத்தை கொடுத்துக் காட்ட சொல்லுவோம், வேற பொண்ணே இல்லீங்க ன்னு ஜோசியரை சொல்லச் சொல்லுவோம், கெடச்சது போதும் ன்னு நீங்க ஒத்துக்கறமாதிரி ஓத்துக்கோங்க ... ஓகே வா?'

'ஓகே மாதிரிதான் சார் இருக்கு, அந்த 30% ... ஒங்களுக்கு யாராச்சு தெரியுமா?'

'என்னைப் பாத்தா உங்களுக்கு என்ன பொம்பளை ப்ரோக்கர் மாதிரி தெரியுதா?'

'அதில்ல சார்'

'ஆரம்பத்துல நீங்க ஒரு யோகி, நல்லவரு வல்லவரு ன்னு சொன்னீங்க, வேலை முடிஞ்ச உடனே ....'

'சாரி சார், நான் பார்த்துக்கறேன், நன்றி சார்'

'வாழ்க வளமுடன்'



[ கல்யாணம் ... இன்னும் முடியலை ]

No comments:

Post a Comment