Saturday, June 30, 2012

அரிச்சந்திரன் - 8

                                    காசியில் ஒரு காட்டில்

அடர்ந்த காடு
தளர்ந்த நடை
கஷ்டப்பட்டு கடக்கிறார்கள்
பசியால் மகன் வாடுகிறான்,
நீர் வேண்டி மனைவி வேண்டுகிறாள்;
விசுவாமித்ரரின் சீடன் தனக்கு
பணிவிடை செய்ய ஆணை இடுகிறான்;
அல்லல் படுகிறான் அரிச்சந்திரன்;

'பொருள் தர முடியாதெனச் சொல்,
உடன் நான் திரும்பிச் செல்கிறேன்,
உனை இக்கணமே விட்டு
விலகிச் செல்கிறேன்;
உன் கஷ்டம் உன்னோடு,
நானேன் கஷ்டப்பட வேண்டும் உன்னோடு,
விளக்கம் இருக்கா, சொல்லிடு ?'

பொறுத்துக்கொள்ளக் கெஞ்சினான் அரிச்சந்திரன்;
‘போதாது இன்னும் உண்ணக் கொடு,
குடிக்க நீர் கொடு’
எல்லாம் எனக்குக் கொடு,
கூடவே வந்து
கேடு செய்தான்,
தொல்லை தந்தான்

மனைவி தன் தாகம் பொறுத்துக் கொண்டாள்.
மகன் தன் பசி மறந்துத் தொடர்ந்தான்.

காட்டு வழி வந்தவர்,
காசி அடைந்தனர்;
தம் கஷ்டங்கள் தீர
மனமுருகி வேண்டினர்;
'காசி விஸ்வநாதா,
எம்மைக் காத்திடுவாய்.
கெடுதி எது வந்த போதிடினும்
தர்ம நெறி தவறாது வாழ வழி செய்வாய்.
எப்பிறப்பிலும்
எப்பாவம் செய்திட்ட போதிடினும்
எமை மன்னித்து அருள்வாய்.
சொன்ன சொல் தவறாது வாழ
சொக்கநாதா அருள் புரிவாய்.
ஒன்றுமறியா பாலன்
எம்மோடு துயரடைகிறான்.
அவனுக்கு எத்துயரும் நேராது
தயை செய்திடுவாய்'.

அப்பொழுது சந்திரமதி
ஒரு யோசனை சொன்னாள்;
தன்னையும் பிள்ளையையும்
அடிமையாய் யாரிடமாவுது
விற்றுவிடச் சொன்னாள்;
விற்று பெற்ற பொருள் கொண்டு
விஸ்வாமித்திரர்க்குத் தந்த சொல் காத்திட
யோசனை சொன்னாள்;

அந்த யோசனை கேட்டு
அரிச்சந்திரன் அதிர்ச்சி அடைகிறான்;
அரற்றுகிறான்;
கண்ணீர் விட்டுக் கதறுகிறான்;

                                                                        ( தொடரும் )

No comments:

Post a Comment