Thursday, June 21, 2012

அரிச்சந்திரன் - 4

                                    விஸ்வாமித்ரர் அரிச்சந்திரன் சந்திப்பு

கனவுகளால்
களைத்துப் போனாலும்
அரிச்சந்திரன்
அரசவையில்
அமைச்சர்களுடன்
ஆலோசித்து
அன்றைய கடமைகளை
ஆற்றிவந்தான்;
அப்பொழுது
அங்கு வந்தார்
முனிவர் விஸ்வாமித்திரர்;
மன்னவன் வரவேற்றான்;
வணங்கினான்;
முனிவருக்கு பணிவிடை செய்தான்;
உட்கார ஆசனம்,
உண்ண அன்னம்
எல்லாம் ஏற்பாடாயிற்று;
வந்த வேலை என்ன என்று வினவினான்,
தன்னால் ஏதும்
தொண்டு செய்ய முடிந்தால் மகிழ்வேன் என்றுரைத்தான்;

'அரிச்சந்திரா,
அயோத்தியின் மன்னா,
யாம் யாகம் ஒன்று செய்யவிருப்பதால்,
எமக்குப் பொருளுதவி வேண்டும்,
எனவே உம்மை நாடி வந்தோம்;
உதவி செய்வாய் என்று நம்புகிறோம்;
என்றுரைத்தார்';

'சுவாமி,
தாங்கள் சொல்லி அனுப்பினால் போதுமே,
இந்த நாடே தங்கள் பின்னே நிற்குமே,
எவ்வளவு வேண்டுமோ எடுத்துக்கொள்ளுங்கள்;
எல்லாமே தங்களுக்குத்தான்'

சொல்லி நின்றான் மன்னன்;
இவ்வளவு நல்லவனான
இவனையா சோதிப்பது
என்று எண்ணாது
எள்ளி நகைத்தப்படி தள்ளி நின்றார் முனிவர்;

'மன்னா,
மகிழ்ச்சி;
பொன் எனக்கு இப்பொழுது வேண்டாம்;
பத்திரமாய் என் பொன் உன்வசம் இருக்கட்டும்;
யாகம் பொருட்டு வேறு சில வேலை
இருக்கு;
அவற்றை முடித்து விட்டு வருகிறேன்;
வந்து உன்னிடம் பொன் வாங்கிச் செல்கிறேன்;
இப்பொழுது கிளம்புகிறேன்'
என்று சொல்லிப் புறப்பட்டார்
ஒரு புயலை உருவாக்கி,
அது ஏற்படுத்தும் சேதம் எதுவும் அறியாது
அவருக்கு விடை கொடுத்தான் தலை வணங்கி;

                                                                        ( தொடரும் )

No comments:

Post a Comment