Friday, June 1, 2012

முருகா



     

முருகா ! முருகா ! முருகா ! - - எமக்குத்
   துணையாய் வருவாய் அருள்வாய்.
கந்தா கடம்பா கதிர்வேலா - எம்
   கவலைகளைப் போக்கி நீ அருள்வாய்.

ஆறுமுகனே -
அபயம் அளிப்பவனே
அழகனே
அண்டம் காத்திடத் துணை புரிபவனே,
சண்முகா - எம்
சங்கடங்களை தீர்த்திட வா !

பார்வதியின் புத்திரனே - எம்
பாவங்களைப் போக்கி அருள்பவனே,
சிக்கல் சிங்காரவேலவா,
சீக்கிரம் எம்முன் வா வா வா;


கதிர்காம வேலவனே - எம்
கவலைகளைத் தீர்ப்பவனே,
கார்த்திகை மைந்தனே - நீவிர்
வாழி வாழி வாழியவே !

பரமேஸ்வரன் புத்திரா,
பார்வையில் சுந்தரா,
பக்தர்களின் மித்திரா - நீவிர்
வாழி வாழி வாழியவே !

பார்வதிக்கு மகனே,
பானை வயிறோனுக்கு இளையோனே,
பழனி மலையோனே - நீவிர்
வாழி வாழி வாழியவே !

     

No comments:

Post a Comment