Sunday, June 24, 2012

அரிச்சந்திரன் - 5

                                    காட்டில் வேட்டை

விஸ்வாமித்ரர் வந்து,
யாகம் செய்ய பொருள் வேண்ட,
அரசனும் அதைத்தருவதாய்
வாக்குத் தர,
வாக்கு பெற்றுக்கொண்டு
வந்த வழி முனிவர் திரும்ப,
அதனைத் தொடர்ந்து
அரசனைக் காண
அயோத்தி மக்கள் வர,
தங்கள் வயலை
சேதப்படுத்தும் மிருகங்களை
வேட்டையாட அவர்கள் உதவி கேட்க,
அரசன் கிளம்பினான் வேட்டைக்கு;
தன் மக்களின் உதவிக்கு;

வேட்டை நடந்தது;
வயலை நாசமாக்கும்
விலங்கினங்கள் வீழ்த்தப்பட்டது;
வேட்டையாடி களைத்தவர்களுக்கு
ஓய்வு தேவைப்பட்டது;
அரசரும் மற்றவர்களும்
ஆங்காங்கே ஓய்வெடுத்தனர்;
அப்பொழுது இரு மங்கையர்
அரசனைக் காண வந்தனர்;
அழகாய் நாட்டியம் ஆடுவோம்,
அந்தக் குயிலைப் போல் பாடுவோம்,
அதைக் கண்டு கழிக்க வேண்டும் தாங்கள்,
தாங்கள் புகழ்ந்தால்
மகிழ்வோமே நாங்கள்;

ஆணை வந்தது;
ஆட்டம் நடந்தது;
ஆடினார், பாடினர்
அழகு காட்டு
அதிசயக்க வைத்தனர்;
அரசன் மகிழ்ந்தான்,
அழகாய் முத்து மாலை
அன்புப் பரிசாய்த் தந்தான்;

'ஏராளமாய்ப் பொன் பொருள்
இருக்கு எங்களிடம்,
எனவே இதை வைத்துக்கொள்ளும்
தாங்கள் தங்களிடம்'
என்று சொல்ல,

வேறென்ன வேண்டும் என வினவ

'வேந்தே தங்கள் செங்கோல் எங்கட்கு
வேண்டும்' எனச் சொல்ல,
'தலைவன் தன் செங்கோலையும்,
தலை மகுடத்தையும்
தானமாய்த் தருவது
சத்திய நெறிக்கு ஒவ்வாது,
வேறேதும் கேளுங்கள்' என்றான்.

'சரி எங்களை
விவாகம் செய்து கொள்ளுங்கள்' என்றனர்;
'வஞ்சியரே, நான் ஏகபத்னி விரதம் கடைபிடிப்பவன்,
இன்னொரு மணம் செய்ய மனம் ஒப்பாதவன்,
வேறேதும் ... '

'மன்னா,
எங்களை ஆட வைத்து,
பாட வைத்து,
பின் நாங்கள் கேட்டதை
கொடுக்க மறுக்கும் தங்களைக்
கேள்வி கேட்க ஒரு
துணையோடு வருவோம்'

எனச் சொல்லிவிட்டு அங்கிருந்து
விரைந்தனர்;

அடுத்த சிறிது நேரத்திற்கெல்லாம்
அங்கே வந்தார் விசுவாமித்திரர்
அந்தப் பெண்களோடு,
கண்ணில் கோபத்தோடு,
நெஞ்சில் வஞ்சத்தோடு;

                                                                        ( தொடரும் )

No comments:

Post a Comment