Thursday, June 14, 2012

அரிச்சந்திரன் - 1

                                    முன்னுரை


          


அரிச்சந்திரன்,
அயோத்யா நாட்டு
அரசன்;
அறநெறியில் வாழ்பவன்;
சத்ய விரதம்
பூண்டவன்;
சத்தியம் தர்மம்
பிறழாது வாழ்பவன்;
உண்மை ஒன்றே
உரைப்பவன்;
உண்மை அற்றவற்றை
உரைக்காதவன்;
சொன்ன சொல் தவறாதவன்;

அற வழியில் நடப்பவர்க்கு
ஆயிரம் சோதனை வரும்;
அரிச்சந்திரனுக்கும்
அதுபோல் சோதனை வந்தது;
அவதி வேதனை
அவனை நாடி வந்தது;
விஸ்வாமித்ர முனி
வேடத்தில் வந்தது;

                                    தேவேந்திரன் திருச்சபை

ஒரு நாள்
இந்திரனும் மற்ற தேவர்களும்
சபையில் கூடி இருக்கையில்,
விஸ்வாமித்ரர் மற்றும்
வசிஷ்டர் ஆகியோரும் அங்கு இருக்கையில்,
வசிஷ்டர்,
தன் சிஷ்யன்
அரிச்சந்திரன்
சத்ய தர்மம் பிறழாது வாழ்பவன்
என்று சொல்ல,
அவனை சோதித்து
அறவழி தவிர்க்க வைப்பேன்,
அப்படி இல்லாது போனால்
என் தவ வலிமையில் பாதி தருவேன்
என விஸ்வாமித்ரர் சூளுரைக்க,
இப்படியாக ஏற்பட்டது
அரிச்சந்திரனுக்கு இக்கட்டு;
இதற்கென குறிக்கப்பட்ட காலம்
ஒரு ஆண்டு;

இது அரிச்சந்திரன் மேலுள்ள கோபத்தால்
ஏற்பட்டதன்று;
வசிஷ்டரே உம்முடைய கர்வத்தை அடக்கும் பொருட்டே
ஏற்பட்டது
என உரைத்து அவ்விடம் விட்டு நகர்ந்தார்
விஸ்வாமித்ரர்.

                                                                        ( தொடரும் )

No comments:

Post a Comment