Monday, July 2, 2012

அரிச்சந்திரன் - 9

அப்பொழுது சந்திரமதி
ஒரு யோசனை சொன்னாள்;
தன்னையும் பிள்ளையையும்
அடிமையாய் யாரிடமாவுது
விற்றுவிடச் சொன்னாள்;
விற்று பெற்ற பொருள் கொண்டு
விஸ்வாமித்திரர்க்குத் தந்த சொல் காத்திட
யோசனை சொன்னாள்;

அந்த யோசனை கேட்டு
அரிச்சந்திரன் அதிர்ச்சி அடைகிறான்;
அரற்றுகிறான்;
கண்ணீர் விட்டுக் கதறுகிறான்;

மனைவியும் பிள்ளையும் அவனைத் தேற்றுகின்றனர்;
தங்களுக்கு உதவுவதே எங்கள் கடமை
என்று சொல்லுகின்றனர்;

'நாள் முடிகிறது,
இன்றோடு முனிவர் தந்த தவணை
முடிகிறது;
சீக்கிரம் கடன் முடிக்கவும்,
முடியவில்லை என்றால் அதைச்
சொல்லித் தொலைக்கவும்'
அவரசப்படுத்துகிறான்
முனிவன் அனுப்பிய சேவகன்;

தன் குடும்பத்தை
விற்க முடிவுசெய்கிறான்
முன்னாள் மன்னன்;

'அன்பான காசி நகரத்து மக்களே,
அயோத்தி நகரத்தை
ஆண்ட அரசன் நான்;
அன்று நான் விஸ்வாமித்திரர்க்குத்
தருவதாய்ச் சொன்ன பொருளுக்கு,
இன்று என் மனைவி மகனை
அடிமையாய் விற்க
ஆட்பட்டேன்; என் தேவைக்கேற்ப
பொருள் தருவோர் இவர்களை
அடிமையைக் கொள்ளலாம்'

அறிவித்தான் அரிச்சந்திரன்;

அவ்ஊரிலே பணக்காரர் வந்தார்;
அரிச்சந்திரன் கேட்கும் பொருள் தந்தார்;
அடிமைகளாய் வாங்கியவர்களைத் தன்னோடு
அழைத்துச் சென்றார்; விஸ்வாமித்ரர்
அனுப்பிய சீடன்
அரிச்சந்திரன் கடன் தீர்ந்தது என்று சொன்னான்;
இருந்தும் தன் அன்பு மனைவி மகனைப் பிரிவதை எண்ணிக்
கண்ணீர் வடித்தான் அரிச்சந்திரன்;
அம்மட்டும் தான் சொன்ன சொல்லைச் காக்க உதவியதற்கு
அந்த காசி நாதனை வணங்கி நன்றி சொன்னார்;


தான் இனி போகலாமா என உத்தரவு கேட்டார், அந்தணணிடம்;
தனக்குத் தர வேண்டிய தரகு பாக்கி, அதைத்
தந்து விட்டு செல், அந்தணன் சொன்னான் அரசனிடம்;

தரகு தருவதாய்ச் சொல்லவில்லை என்றான் அரிச்சந்திரன்;
தரகு தராது கணக்கு முடிவதில்லை என்றான் அந்தணன்;
தராது போனால் விஸ்வாமித்ரரின் பொருளில்
தன் தரகை எடுத்துக் கொள்கிறேன் என்றான்;
தன் மனைவி மக்களை விற்றவன்
தன்னை விற்க தயங்குவானா என்ன ? அரிச்சந்திரன்
தன்னை அடிமையாக விற்றான்; அதில் கிட்டியதை
அந்தனனுக்குத் தந்தான்;
அரிச்சந்திரனை அடிமையைக் கொண்டவன்
அவ்வூரில் சுடுகாட்டைக் காப்பவன்;
அவ்வேளை முதல் அரிச்சந்திரனை
அச்சுடுகாடு காக்கும் வேலை செய்யப் பணிந்தான்;
அந்தணன் தன் பொருள் பெற்றுக் கொண்டு
அவ்விடம் விட்டகன்றான் ;

                                                                        ( தொடரும் )

No comments:

Post a Comment