Thursday, July 12, 2012

அரிச்சந்திரன் - 11

இரவு நேரம்;
மயானம்;
காவலில் அரிச்சந்திரன்;
அழுதழுது வீங்கியக் கண்களோடு,
உடைந்த நெஞ்சத்தோடு,
வருகிறாள் சந்திரமதி;
காவலுக்கிருப்பவன் தன் கணவன்
என்பதை அறியாள்;
பிணமாய்க்கிடப்பவன் தன் பிள்ளை
என்பதை அறியான்;

பிணத்தை எரிக்க
வரி கேட்டான்,
தன்னிடம் தர ஏதுமில்லை என்று சொன்னாள்;
அடிமையாய் வாழ்வதை
அவனுக்குச் சொன்னாள்;
என் பங்கான
வாய்க்கரிசி, இடைத்துண்டு
இரண்டையும் நான் தள்ளுபடி செய்கிறேன்;
ஆனால் என்னை வேலைக்கு வைத்தவனுக்கு
வர வேண்டிய வரியை தான்
தள்ளுபடி செய்ய இயலாது; அதைத்
தராது பிணத்தை எரிக்க முடியாது;
கண்டிப்பாய்ச் சொன்னான் அரிச்சந்திரன்;
கண்ணீர் தவிர தன்னிடம் தர வேறொன்றுமில்லை
கதறினாள் சந்திரமதி;

பணமாய் இல்லை என்றால் ஏதேனும்
பொருளாய் வரி தா என்றான்;
என்ன இருக்கு என்னிடம் என்றாள்;
இருக்கு உன் கழுத்தில் தாலி,
அதை எடுத்துத் தா என்றான்;

என் கணவரைத் தவிர வேறெவர்க்கும்
என் கழுத்துத் தாலி தெரியாது,
உமக்கெப்படி தெரிந்தது அது
வினவினாள் சந்திரமதி;

அதிர்ச்சி அடைந்தான் அரிச்சந்திரன்;
யார் நீ என்று வினவினான்;
சந்திரமதி தன் விவரம் விளக்கினாள்;
இறந்து கிடப்பது
இளவரசன், தன் பிள்ளை என்று அறிந்தான்;
கதறி அழுதான், தன்
கண்ணீரால் பிணத்தைக் கழுவினான்;

ஆருயிர்ப் பிள்ளை இறந்து கிடப்பதைக் கண்ட பின்னும்
மண்ணில் வாழ வேண்டியிருக்கே என்று மருவினான்;
ஆனாலும் தன் கடமையை மீறாது இருந்தான்;
மகனே ஆயினும், மரணம் உற்ற போதிலும்,
வரி தராது
பிணமெறிக்க முடியாது என்றான்;

                                                                        ( தொடரும் )

No comments:

Post a Comment