Friday, July 27, 2012

அரிச்சந்திரன் - 13

                                    சோதனை முடிந்தது

தலைவன் அரிச்சந்திரன்
தன் கடமையைச் செய்ய
தயாரானான்;
தலைவியிடம்
தன்னை மன்னிக்கக் கோரினான்;
கணவன்
கையால் மடிவதில்
தனக்குக் கொஞ்சம் கூட
தயக்கமில்லை,
கவலையில்லை,
கடமை செய்,
காரியம் நிறைவேற்று என்று
உற்சாகப்படுத்தினாள்;

வாள் ஓங்கினான் அரிச்சந்திரன்;
கண் மூடித் தயாரானாள் சந்திரமதி;
'நில் அரிச்சந்திரா நில்'
சொல்லிக்கொண்டே,விஸ்வாமித்திரர் அங்கு வந்தார் ;
கண்களில் கண்ணீர் மல்க நின்றார்;
தன்னை மன்னிக்க வேண்டினார்;
வசிஷ்டரிடம் தான் செய்த சபதம் சொன்னார்;
இத்தனைக் கஷ்டம் தந்தது தானே என்று
ஒப்புக்கொண்டார்;
பிள்ளை பொன் பொருள் அரசாங்கம் எல்லாம் திருப்பித் தந்தார்;
காசி அரசனின் பிள்ளையை உயிரோடு எழுப்பி
சந்திரமதி குற்றமற்றவள் என்று நிரூபித்தார்;

அரிச்சந்திரன் வணங்கி நின்றான்;
அவன் சந்ததி அவன் பின்னே நின்றது;

'என்ன வரம் வேண்டுமோ கேள் ?'
என்றார் விஸ்வாமித்திரர்;
'எந்நாளும் எப்பிறவியிலும்
சத்தியம் தவறாது வாழ விளைகிறேன்'

கேட்டான் மன்னன்;
கேட்டதைக் கொடுத்தார் முனிவர்;

கவலை எல்லாம் தீர்ந்தது,
காசி விட்டு அயோத்தி செல் என்று அறிவுறுத்தினார்;
அப்படியே செய்தான் அரிச்சந்திரன்;

அதன்பிறகு அவன் வாழ்க்கை
அணுவளவும் துயரமில்லாது,
அன்போடு சத்திய தர்மத்தோடு
ஆட்சி செய்து வந்தான்;


                                                                        ( முற்றும் )

No comments:

Post a Comment