Monday, January 23, 2012

சிவபுராணம் - 7

                                    கேதர்நாத்


ஜோதிர்லிங்கத்தில் ஐந்தாவது
கேதர்நாத்.
வடஇந்தியாவில்
உத்தரகாண்டில்
உள்ள ஊர்,
பனி நிறைந்த இமாலயப்
பிரதேசத்தின் இடையே
அமைந்த ஊர்,
பழமையான,
பல வரலாறுகள் நிறைந்த ஊர்;

கேதார்நாத்,
சிவத்தலங்களில்
மிகப் புனிதத் தலம்
நடந்து மட்டுமே அடையக்கூடிய,
ஆறு மாதங்கள் மட்டுமே திறந்திருக்கக்கூடிய
அரியத் தலம்.
ஆதிசங்கரரால்
அமைக்கப்பட்டத் திருத்தலம்;
கௌரிகுந்த் என்ற இடத்திலிருந்து
மலையேறி
மகேஸ்வரனை
மனமுருகிக் காண வேண்டும்;

பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும்
போர் நடந்து முடிந்த சமயம்;
போரில் கொல்லப்பட்டோரினால் ஏற்பட்டப்
பழிக்குப் பரிகாரம் தேடிப்
பாண்டவர்கள்
பரமேஸ்வரனை நாடி இமாலயம் வந்தனர்;
பல நாட்கள் தேடி
அலைந்தனர்;
அவ்வமயம் வித்தியாசமாய் ஒரு எருது எதிர்பட,
அதன் பின் பாண்டவர்கள் ஓட,
அவ்வெருது
அவர்களிடம் அகப்படாது பூமியுள் புதைய, பீமன்
அதன் வால் பிடித்து இழுக்க,
எருது வால் விடுத்து,
தலையோடு மட்டும் நேபாளம் செல்ல,
அங்கே இந்த எருதுவின் தலையே
பசுபதிநாத் என்று அழைக்கப்பட,
வால் விட்டுச் சென்ற இடத்தில்
ஒரு லிங்கம் தோன்ற,
பரமேஸ்வரன் ஒளி ரூபத்தில் அங்கே
பாண்டவர்களுக்குக் காட்சி அளித்தார்; அவர்கள்
பாவங்கள் தீர்த்தார்;
என்னைக் காண வருவோர் பாவங்கள்
என்னால் தீர்க்கப்படும்
என்று வாக்குத் தந்தார்;

கேதார் என்ற
அவ்விடத்தில் தோன்றிய லிங்கம்
கேதார்நாத் என்றே அழைக்கப்படுகிறது;

எருதாய்த் தோன்றியச் சிவனோடு
சண்டையிட்ட பீமன்,
சிவன் மேல் கொண்ட பாசத்தால்
அவன் மேல் நெய் ஊற்றி வழிபட ஆரம்பித்தான்;
அன்று தோன்றிய
அந்தப் பழக்கம் இன்று வரை
நெய் ஊற்றி வழிபாடு தொடர்கிறது;

இவ்விடத்திற்கு
இன்னொரு கதையும் உண்டு;
நர-நாராயனாகத் தோன்றியத் திருமால்,
பத்ரிகாஸ்ரமத்தில் சிவனை வழிபட,
சிவன் அங்கே தோன்றி நலம் கேட்க,
அதைத் தொடர்ந்து வரம் தர,
மக்கள் வழிபட ஏதுவாக
மகேஸ்வரன் இங்கே இருக்கவேண்டும் என்றும்,
தன் சுய ரூபமான
ஜோதி வடிவில் விளங்க வேண்டும் என்றும்
வரம் கேட்க,
வரம் தந்தார்;
பத்ரிகாஸ்ரமம் இமாலயத்தில்
கேதார் என்ற சிகரத்தில் இருக்கிறது;
இங்கு தோன்றிய சிவம்
கேதார்நாத் என்ற அழைக்கப்படுகிறார்;


     நாவின்மிசை யரையன்னொடு
      தமிழ்ஞானசம் பந்தன்
     யாவர்சிவ னடியார்களுக்
      கடியானடித் தொண்டன்
     தேவன்திருக் கேதாரத்தை
      ஊரன்னுரை செய்த
     பாவின்றமிழ் வல்லார்பர
      லோகத்திருப் பாரே.
            ( சுந்தரர் - தேவாரம் )


                                                                        ( தொடரும் )

No comments:

Post a Comment