Thursday, January 12, 2012

சிவபுராணம் - 2

                                    படைத்தல்

படைக்கும் தொழிலைத்
தொடங்கினார் பிரம்மா;
படைத்தார் ரிஷிகளை,
அவர்கள் ஆயினர் கர்தமா, தக்ஷ மற்றும் மரீசி;
மரீசீயின் மகன்
காஷ்யப்பா;
தக்ஷனின் புதல்விகளை
காஷ்யப்பா மணந்து கொள்ள
அவர்களின் பிள்ளைகள்
அமரர்களாகவும்,
அரக்கர்களாகவும்
ஆனார்கள்;

இதையும் தொடர்ந்து
இன்னும் படைத்தார்,
மரம், செடி, கொடி,
மலை, ஊர்வன, பறப்பன என
பல உயிரினங்களையும்
படைத்தார்;
தக்ஷனின் மகள் சதி;
ருத்ரன், சிவனின் இன்னொரு வடிவம்
இமாலயத்தில்
தவம் செய்து வந்தார்,
சதியை மணந்தார்;
தக்ஷனுக்கும் ருத்ரனுக்கும்
தகராறுதான் எப்பொழுதும்;
இருவரும் ஒருவரை ஒருவர்
வெறுத்து வந்தனர்;
ஒருமுறை தக்ஷன்
ஒரு யாகம் செய்தான்;
சிவனை அழைக்காது
செய்யப்பட்ட வேள்விக்கு
சதி வந்தாள்;
அழைக்காமல் வந்ததால்
அவமானப்பட்டாள்;
தன் உயிர்நீத்தாள்;
ஆத்திரமடைந்தான் ருத்ரன்;
தக்ஷனின் வேள்வியை அழித்தான்;
அவ்வேள்விக்கு வந்தவர்களை
அழித்தான்;
ஆத்திரம் தணிந்தபின்
ஆருயிர் நீத்தவர்கள், பிழைத்தார்கள்;
சதி மட்டும்
பர்வதங்களின் அரசனுக்குப்
பெண்ணாய்
பார்வதியாய்ப் பிறந்தாள்;

                                    தாரகாசுரன்

தரகன் என்ற அசுரன்;
கடுந்தவம் புரிந்தான்;
பிரம்மன் அவன் முன் தோன்றினான்;
உன்னால் படைக்கப்பட்ட
எதனாலும்
எனக்கு அழிவு கூடாது என்றும்
சிவனுக்குப் பிறக்கும் பிள்ளை தவிர
வேறெவராலும் எனக்கு அழிவு கூடாது என்றும்
வரம் கேட்டான் அசுரன்;
வரம் தந்தான் பிரம்மன்;

                                                                        ( தொடரும் )

No comments:

Post a Comment