Wednesday, January 11, 2012

சிவபுராணம் - 1


                                    முன்னுரை

மும்மூர்த்திகள்,
பிரம்மன் படைக்க,
பரந்தாமன் மகா விஷ்ணு
படைத்ததைக் காக்க,
பரமேஸ்வரன்
படைத்ததன் பணி முடிவடைந்ததும் அழிக்க
இவ் பூலோகம்
இவ்வாறாய் இயங்கி வருகிறது
இனியதாய்;

இதில் சிவபெருமானின் திருவிளையாடல்களை
இனி அனுதினமும்
படிப்போம்;
படித்ததை ரசிப்போம்;
ரசித்துப் படித்ததைப் பாடி
பரமேஸ்வரன் அடி தொழுவோம்;
பரவசம் அடைவோம்;


     நமச்சிவாய வாழ்க
     நாதன்தாள் வாழ்க
     இமைப் பொழுதும் என்நெஞ்சில்
     நீங்காதான் தாள் வாழ்க.


நமசிவாய மந்திரத்தின் மூலமானவன் வாழ்க;
அவன் திருவடி வாழ்க;
ஒரு நிமிடமும் என் நெஞ்சிலிருந்து நீங்காத
அவன் திருவடி வாழ்க;

எப்பொழுதும் போல்
இப்பொழுதும்
இதில் ஏதும் பிழை இருப்பின்
தெரிந்தவர் சொன்னால்
திருத்திக்கொள்ளப்படும்;

                                                                        ( தொடரும் )

No comments:

Post a Comment