Wednesday, January 18, 2012

சிவபுராணம் - 6

                                    ஒம்கரேஸ்வர்


நர்மதா ஆறு
நாலு புறமும் சூழ,
மந்தாத எனும் இடத்தில்
மகேஸ்வரன் ஒம்கரேஸ்வரராக எழுந்தருளிய
இடமே ஜோதிர்லிங்கத்தில் 4 வது லிங்கமாகும்;

மந்தாத என்ற இவ்விடம்
சிவபுரி எனவும் அழைக்கப்படுகிறது;
நர்மதா ஆற்றில்
ஓம் எனும் வடிவத்தில்
அமைந்துள்ளது
இத் தீவு;

நாரதர் ஒரு முறை
விந்திய மலை வழி வர,
அப்பொழுது அம்மலை
என்னிடம் எல்லாம் இருக்கு,
கொஞ்சம் இங்கே தங்கு,
எனச்சொல்ல,
சுமேரு மலை உன்னோடுச் சிறந்தது,
ஏனெனில் அதில் தேவர்கள் வாசம் செய்கின்றனர்
என நாரதர் சொல்ல,

அடுத்த கணமே விந்திய மலை
அந்த ஈஸ்வரனை எண்ணிப் பிரார்த்திக்க,
ஈஸ்வரன் ஒம்கரேஸ்வரனாக
அங்கே தோன்றினார்.
அங்கேயேத் தங்கி
அருள்பாளிப்பதாய்
வாக்கும் தந்தார்;

இதுவும் தவிர
இன்னொரு கதையும் உண்டு;
இரவி குலத்தில் மந்தாத
இனத்தைச் சேர்ந்த
இரண்டு ராஜ குமாரர்கள்
அம்பரீஷ் மற்றும் முச்குந்த்
சிவனை எண்ணி கடுந்தவம் புரிந்த இடம்
என்பதால் இவ்விடம் மந்தாத என்று அழைக்கப்படுகிறது;

ஓடும் நர்மதையில்
ஒரு தீவில்
ஒய்யாரமாய்
ஒம்கரேஸ்வரர் அருள்பாலிக்க
ஒ ! மக்களே,
ஓடி ஓடிக் கலைத்தவர்களே,
ஒருநிமிடம் தரிசியுங்கள்,
ஓயாத்துயரெல்லாம்
ஒரு நொடியில் நீங்கும், உணருங்கள்.

                                                                        ( தொடரும் )

No comments:

Post a Comment