Tuesday, January 17, 2012

சிவபுராணம் - 5

                                    மல்லிகார்ஜுனா

ஒருமுறை கைலாயத்தில்
சிவ பார்வதியின் பிள்ளைகள்
கணேசனுக்கும்,
கார்த்திகேயனுக்கும், யார்
உயர்ந்தவர் என்ற
விசயத்தில்
வாக்குவாதம்
வந்துவிட, தன்
சந்ததிகளின்
சர்ச்சையைச் சமாளிக்க
பரமேஸ்வரன்
போட்டி ஒன்று அறிவிக்க, மூத்தத்
தனையன் கணேசன் அதில் வென்று
தானே வென்றதாக அறிவிக்க, இளையத்
தனையன் முருகன் கோபத்தில்
தனியே வாழ ஆரம்பிக்க,
சமாதானம் பேச வந்தோரிடமெல்லாம்
சம்மதம் இல்லாது பேசித் திருப்பி அனுப்ப,
சிவ பார்வதியையும் தன்னருகில் அனுமதிக்காது
தனிமையில் வாழ்கையில்,
முருகன் வாழும் மலையின் அருகில்
மகேஸ்வரன் தன் மனைவியோடு
வாழ்ந்து வந்தார்; இவ்விடமே
ஜோதிர்லிங்கத்தில் இரண்டாவதான
மல்லிகார்ஜுனா எனப்படும்;


                                    மகாகாலேஸ்வர்

சிப்ரா ஆற்றின் கரையில்
அமைந்தது
அவந்தி நகரம்;
அவ்வூரில் வேதப்ரியன் என்பவர்
வேதம் பயிற்றுவித்து
வாழ்ந்து வந்தார்;
அவரின் பிள்ளைகளும்
அவரோடு வாழ்ந்து வந்தனர்;
அவந்தி நகரின்
அருகிலே ரத்னமாலா என்ற மலையில்,
அரக்கன் ஒருவன் வாழ்ந்துவந்தான்;
அவன் பெயர் துஷாணன்;
வேதம் வகுத்த பாதை வழி
வாழ்பவர்களைக் கண்டால்
வீரம் கொள்வான், அவர்களை
விரட்டி அடிப்பான்;
வேதப்ரியன் பற்றி அறிந்த
துஷாணன் அவர்கள் இருப்பிடம்
வந்தான்;
வேதம் மற இல்லை நான்
கழுத்தை நெறிப்பேன், இற;
பயமுறுத்தினான்,
பயப்படாது நின்றனர்,
தீயவன் தூயவர்களைக்
கொல்லத் துணிந்தான்;
அப்பொழுது ஒரு சத்தம்,
வேதப்ரியன் வணங்கி வந்த
லிங்கத்திலிருந்து
லிங்கேஸ்வரன் தோன்றினார்;
துஷாணனை எரித்தார்;
வேதப்ரியனும் அவன்
பிள்ளைகளும், சிவனை
இங்கேயே என்றும் தங்கி இருக்க வேண்ட,
சிவனும் சம்மதித்து
அருளாசி வழங்கும்
அந்த இடம் தான்
ஜோதிர்லிங்கத்தில் மூன்றாவதான
மகாகாலேஸ்வர் ஆகும்.




                                                                        ( தொடரும் )

No comments:

Post a Comment