Tuesday, February 7, 2012

சிவபுராணம் - 8

                                    பீமாஷங்கர்

அருள் அள்ளித்தரும்
அந்தச் சங்கரனின்
ஆறாவது ஜோதிர்லிங்கம்
இந்த பீமாஷங்கர்.


ராமாயணக் காலத்தில்
ராமனால் கொல்லப்பட்டவர்கள்
ராவணனும் கும்பகர்ணனும்;

சகாயத்ரி மலையில்
கார்கடி என்ற அரக்கி
வாழ்ந்து வந்தாள்;
இவள் கும்பகர்ணனின்
மனைவி ஆவாள்;
இவர்கட்குப் பிறந்த பிள்ளை
பீமன், கார்கடிக்கு துணையாய்
இருந்து வந்தான்;

ஒருநாள் பீமன் தாம்
ஒதுங்கி ஓரமாய் வாழ்வதெதற்கு
என்று வினவ,
கார்கடி அவன் தந்தை பற்றி
அவனுக்கு சொல்ல,
அதைத் தொடர்ந்து
ராமன் கும்பகர்ணனைக் கொன்றதை
அவனுக்கு விளக்க,
தந்தையைக் கொன்றவன்
தலையை எடுப்பேன் என்று
தனயன் கிளம்ப,
தன் செயலுக்கு வலிமை சேர்க்க வேண்டு
பிரம்மனை நோக்கித் தவமிருக்க,
பிரம்மனும் அவனுக்கு
வலிமை கிட்டும் என
வரம் தர,
வலிமை பெற்றவன்
வானவர்களை
வம்புக்கிழுத்து
வதைத்தான்.


இதற்குப் பிறகு
காமரூபன் என்ற அரசனை,
சிவ பக்தனை
எதிர்த்துப் போர் புரிந்தான்;
போரில் வெற்றி பெற்றான்;
அரசனை சிறையிலடைத்தான்;
அரசன், சிறையிலிருந்தாலும்
சிவனை இடைவிடாது
துதித்தான்;
அரசன் செயலை
அரக்கன் கேள்விப்பட்டான்;
அவனை கொன்றுவிடுவதென
அக்கணமே கிளம்பினான்;
காமரூபன் பூசை செய்யும் சிவலிங்கத்தை
இரண்டாய் பிளக்கத்
தன் வாளை உருவினான்;
லிங்கத்திலிருந்து சிவன் தோன்றினான்;
தன் சூலாயுதத்தால்
பீமனின் தலையைத் துண்டித்தான்;

தேவர்கள் மகிழ்ந்தனர்;
பீமனைக் கொன்ற சங்கரனை
அங்கேயே லிங்க வடிவத்திலிருந்து
அருள் பாலிக்க வேண்டினர்;
சிவனும் சம்மதித்தான்;
அனைவருக்கும் ஆசி தந்தான்;

இவனே பீமாசங்கரன்;

பீமனைக் கொன்றவன் இவன்
பிழை தீங்கு செய்தாரை இல்லாது செய்தவன் இவன்
பாசம் தந்தாரை ஆட்கொள்பவன் இவன், அவனே
பீமஷங்கர் என்று புகழப்பெற்ற சிவன்.

                                                                        ( தொடரும் )

No comments:

Post a Comment