Monday, February 20, 2012

மகா சிவராத்திரி



     


எங்கும் இருள்;
எனினும் எந்தக் கவலையுமில்லாமல்,
அச்சமின்றி
அமைதியாய் இருந்தேன்;

மனதில் மட்டும்
சொன்னதையே சொல்லிக்கொண்டு வந்தேன்;

எங்கோ குறைக்கும் நாய்;
அமைதியாய் இரு என்று
அன்பாய் அதட்டினேன்;

மழை வராப்பொழுது;
காற்று கொஞ்சம்;
குளிர் கொஞ்சம்;
உறங்காது விழித்திருந்தேன்;

தெரிந்தே தவறேதும் செய்யவில்லை;
இனி செய்யப்போவதுமில்லை;
என்றும் நீ துணை வர
எந்நேரமும் எண்ணி இருப்பேன் உன்னையே;
உன் பெயரை சொல்லி வந்தேன்;

சொல்லச் சொல்ல அமைதி; அந்தச்
சொல்லே நமக்கு வெகுமதி;

ஓருடலாய்
ஈருயிராய்;

முக்கண்ணோடு
நாற்புறமும் காப்பவனே,
ஐந்தெழுத்து மந்திரத்தை
உச்சரிப்போர்க்கு, வற்றாத
ஆறாய் அருள் வாரி வழங்குவோனே,

ஓம் நமசிவாய !

No comments:

Post a Comment