Wednesday, February 8, 2012

சிவபுராணம் - 9

                                    காசி விஸ்வநாத்

வாரணாசி அல்லது காசி
என்றழைக்கப்படும் இவ்விடமே
7வது ஜோதிர்லிங்கம் அமைந்த இடமாகும்.


வாரணாசி,
இந்துக்களின் மிகப்புனிதமான
இடம்.
பிரம்மா தேவன் கடுந்தவம்
செய்த இடம்.
பிரள காலத்தில் கூட
அழியாது சிவன் காத்த இடம்.
உத்திரப் பிரதேசத்தில்
உள்ள ஒரு இடம்.
புனிதமான கங்கை நதியின்
மேற்குக் கரையில் கோவில் கொண்ட இடம்.

உலகத்திலேயே
மிகப் பழமையான ஊர்
இதுவே ஆகும்.

ஜோதிர்லிங்கமாய் சிவன் அருள் தரும்
இவ்விடத்தில் இவன் பெயர்
விஸ்வநாதா அல்லது விஷ்வேஸ்வரா.
இதன் பொருள்
இவ்வுலகத்தை ஆள்பவன் என்பதாகும்.

முகலாயர் ஆதிக்கத்தில்
இந்தக் கோவில் பல முறை சிதைக்கப்பட்டும்
மீண்டும் மீண்டும் எழுப்பப்பட்டு இன்றும்
கம்பீரமாய் நிற்கிறது;
இந்தக் கோவிலின் மிக அருகில்
மசூதி ஒன்று உள்ளது;
அந்த மசூதி இருக்கும் இடமே
கோவிலிருந்த இடம் என்று
சொல்லப்படுகிறது;
ஜோதிர்லிங்கத்தைத் தவிர்த்து
இந்தக் கோவிலில்
இன்னும் பல சன்னதிகள்
இருக்குது;
இந்தக் கோவிலில்
இருக்கும் ஞானவபி என்ற குளத்தில்
மூர்த்தியை ஒளித்து வைத்து
முகலாயரிடமிருந்து காத்ததாய்
சொல்லப்படுகிறது;


காசி விஸ்வநாதரை தரிசிப்போம், நம்
கவலை எல்லாம் தீரும்
வளமாய்
வாழ்ந்திடுவோம்;

                                                                        ( தொடரும் )

No comments:

Post a Comment